News January 19, 2025

TN காவல்துறையை பங்கம் செய்த வேங்கைவயல் மக்கள்

image

2 ஆண்டுகளைக் கடந்தும் வேங்கைவயல் வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால், பாதிக்கப்பட்ட மக்கள் CBCID தூங்குவதாக விமர்சித்து பேனர் வைத்துள்ளனர். 2022 டிசம்பரில் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட வழக்கு இன்னும் விசாரணை நிலையிலேயே உள்ளது. இந்நிலையில், “இவ்வழக்கை தொடர்ந்து 100 ஆண்டுகள் விசாரணை நடத்த வாழ்த்துகிறோம்” என வடிவேலு போட்டோவுடன் விமர்சித்துள்ளனர். உங்க கமெண்ட் என்ன?

Similar News

News March 8, 2026

₹1 செலவில்லை.. இலவச மருத்துவ ஆலோசனை!

image

பல இடங்களில் மருந்துச் செலவை விட, டாக்டரின் Consultation Fees மிக அதிகமாக உள்ளது. இது ஏழை எளிய மக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. இதனை தவிர்க்க, மத்திய அரசு இ-சஞ்சீவனி என்ற திட்டத்தை வழங்குகிறது. இணையதளம் மூலம் தொலைபேசி / வீடியோ கால் மூலம் நோய்கள் & சிகிச்சைகள் பற்றி டாக்டரிடம் ஆலோசனை பெறலாம். இதில் வழங்கப்படும் இ-பிரிஸ்கிரிப்ஷனை வைத்து மருந்துகளும் வாங்கலாம். இப்பதிவை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News March 8, 2026

காய்கறிகள் விலை பாதியாக குறைந்தது!

image

வரத்து அதிகரிப்பால் சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை கடும் சரிவைக் கண்டுள்ளது. கடந்த சில நாள்களாக கிலோ ₹10-க்கு விற்பனையான தக்காளி அதிலும் பாதியாக குறைந்து இன்று 1 கிலோ ₹5-க்கு விற்பனையாகிறது. அதேபோல், 1 கிலோ வெங்காயம் ₹18, கேரட் ₹20, கத்திரிக்காய் ₹15, முருங்கைக்காய் ₹50 என காய்கறிகள் விலை கணிசமாக குறைந்துள்ளது. இந்த விலை சரிவு விவசாயிகளுக்கு வேதனையை கொடுத்துள்ளது.

News March 8, 2026

எழுதாத பேனாவுக்கு சிலை எதற்கு? EPS

image

எழுதாத பேனாவுக்கு கடலில் ₹82 கோடியில் சிலை வைக்க முயற்சிக்கின்றனர். எழுதாத பேனாவுக்கு சிலை எதற்கு என EPS கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல, கார் பந்தயத்துக்கு ₹100 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளதாக கூறிய அவர், மக்கள் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக இந்த அரசு செலவிட்டுள்ளது எனவும் விமர்சித்துள்ளார். மேலும், திமுக அரசை அகற்றுவதுதான் மக்களின் கனவு எனவும் பேசியுள்ளார்.

error: Content is protected !!