News April 30, 2024

சாம்பியன் பட்டம் வென்ற வேலவன்

image

பிரான்ஸ் பேட்ச் ஓபன் ஸ்குவாஷ் தொடரில், தமிழக வீரர் வேலவன் செந்தில்குமார் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். பாரிஸில் நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிச்சுற்றில், இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த வேலவன் செந்தில்குமார், பிரான்ஸின் மெல்விலுடன் மோதினார். 35 நிமிடங்கள் நீடித்த போட்டியில், 3-0 என்ற செட் கணக்கில் வென்ற வேலவன், சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இது அவரது 8ஆவது சர்வதேச பட்டமாகும்.

Similar News

News August 15, 2025

அதிமுகவில் துரைமுருகன் இருந்திருந்தால்.. EPS பேச்சு

image

எந்தவித போராட்டங்களிலும் கலந்துகொள்ளாமல் நேரடியாக அரசியலுக்கு வந்த உதயநிதி, இன்று DCM-ஆக இருப்பதாக EPS விமர்சித்துள்ளார். வேலூர் பரப்புரையில் பேசிய அவர், துரைமுருகனும் மிசாவில் இருந்தவர்தான், அவருக்கு ஏன் உயர் பொறுப்பு கொடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார். ஆனால், துரைமுருகன் அதிமுகவில் இருந்திருந்தால் அவர் இருக்கும் இடமே வேறு என்றும் அவர் கூறினார். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?

News August 15, 2025

மகளிர் உரிமைத்தொகை 24-வது தவணை வந்தது

image

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை(KMUT) திட்டத்தின் 24-வது தவணை ₹1,000 சற்றுமுன் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. 1.15 கோடி பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டதாக அரசு கூறியுள்ளது. கடந்த மாதம் 15-ம் தேதி முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் மூலம் விடுபட்ட நபர்களிடம் இருந்து இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அவை பரிசீலனை நிலையில் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

News August 15, 2025

எதிரிகளை மிரள வைக்கும் ‘சுதர்ஷன் சக்ரா மிஷன்’

image

மோடி அறிவித்த <<17410827>>‘சுதர்ஷன் சக்ரா மிஷன்<<>>’ நாட்டின் பாதுகாப்பை பல மடங்கு அதிகரிக்குமாம். இந்தியாவின் தேவைக்கேற்ற பாதுகாப்பு, நவீன கண்காணிப்பு, துல்லியமான தற்காப்பு உள்ளிட்டவை இதில் திட்டத்தில் உள்ளாக்கப்படுமாம். இஸ்ரேலின் அயர்ன் டோமை விட அதிநவீன அம்சங்களை உள்ளடங்கி உள்நாட்டிலேயே இத்திட்டம் முழுமையாக வடிவமைக்கப்பட உள்ளது. எதிரிகள் இந்தியாவை நெருங்க கனவில் கூட எண்ணக்கூடாது, என்பதே இதன் நோக்கமாம்.

error: Content is protected !!