News March 31, 2025
காய்கறிகள் விலை சரிவு

வரத்து அதிகரிப்பால் சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை கடுமையாக சரிந்துள்ளது. 1 கிலோ தக்காளி ரூ.8 முதல் ரூ.13 வரை விற்கப்படுகிறது. பெரிய வெங்காயம் விலை ரூ.14 முதல் ரூ.20 வரையிலும், சாம்பார் வெங்காயம் ரூ.20 முதல் ரூ.30 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. முட்டைக்கோஸ் 1 கிலோ ரூ.5க்கும், பீட்ரூட், புடலங்காய், முருங்கைக்காய் கிலோ ரூ.15க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Similar News
News April 2, 2025
தோனி இல்லை என்றால் IPL-க்கு தான் இழப்பு: கெயில்

IPL-ல் தோனி விளையாடுவதன் மூலம் அதன் மதிப்பு பல மடங்கு உயர்வதாக கெயில் தெரிவித்துள்ளார். தலைசிறந்த வீரரான அவர் மீது தேவையில்லாத அழுத்தங்களை செலுத்த வேண்டாம் எனவும், அவர் 11ஆவது வீரராக களமிறங்கினாலும் தனக்கு கவலையில்லை எனவும் கெயில் கூறியுள்ளார். மேலும், தோனியின் கீப்பிங் திறன் அதே ஷார்ப்புடன் இருப்பதாகவும், தோனி விளையாடாவிட்டால் அது IPL-க்குத்தான் இழப்பு என்றும் தெரிவித்துள்ளார்.
News April 2, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: ஈகை ▶குறள் எண்: 224 ▶குறள்: இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் இன்முகங் காணும் அளவு. ▶பொருள்: ஈதல் பண்புடையவர்க்குத் தம்மை நாடி வரும் இரவலரின் புன்னகை பூத்த முகத்தைக் கண்டு இன்புறும் வரையில், அவருக்காக இரக்கப்படுவதும் ஒரு துன்பமாகவே தோன்றும்.
News April 2, 2025
துப்புறவு பணியாளர்களுக்கு ₹33.88 கோடி வரி

மாதம் ₹15,000 வருமானம் ஈட்டும் உ.பியைச் சேர்ந்த துப்புறவு பணியாளர் கரண் குமாரை, ₹33.88 கோடி வரி செலுத்த சொல்லி IT நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 10 நாள்களில் நடக்கும் 3ஆவது சம்பவம் இதுவாகும். முன்னதாக, ஒரு ஜூஸ் விற்பனையாளருக்கு ₹7.54 கோடி, பூட்டு தொழிலாளிக்கு ₹11.11 கோடி வரி கட்டச் சொல்லி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. PAN தரவுகள் மோசடியாக பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது.