News April 10, 2024
காய்கறி விலை உயருகிறது

வெயிலின் தாக்கம் அதிகமாவதன் காரணமாக காய்கறி மற்றும் பழங்களின் விலை அதிகரித்துள்ளன. குறிப்பாக பீன்ஸ் விலை இன்று கிலோவுக்கு ₹50 உயர்ந்து ₹90க்கு (கோயம்பேடு சந்தை நிலவரம்) விற்பனை ஆனது. எலுமிச்சை கிலோ ₹80, பீட்ரூட் கிலோ ₹30, கத்திரிக்காய் கிலோ ₹30, கேரட் கிலோ ₹35, இஞ்சி கிலோ ₹110, உருளை கிழங்கு கிலோ ₹24, அவரைக்காய் கிலோ ₹40 என்று விற்பனை ஆகிறது.
Similar News
News December 8, 2025
தோனியால் மட்டுமே இது சாத்தியம்: முரளி விஜய்

தோனி இந்தியாவில் பிறந்ததற்கு நாம் பெருமைப்பட வேண்டும் என EX இந்திய வீரர் முரளி விஜய் தெரிவித்துள்ளார். தோனி இயற்கையானவர், தனித்துவம் மிக்க தலைவர். 2007 T20 WC-ல் கடைசி ஓவரை ஜோகிந்தர் சர்மாவை வீச சொன்னது உள்ளிட்ட தனிச்சிறப்பு வாய்ந்த முடிவுகளை அவரால் மட்டுமே எடுக்க முடியும். அவரை போல வேறு எந்த வலதுகை பேட்ஸ்மேனாலும், மிகப்பெரிய சிக்ஸர் ஷாட்களை அடிக்க முடியாது என்றும் முரளி விஜய் தெரிவித்துள்ளார்.
News December 8, 2025
அமீர்கான் பட இயக்குநர் கைது

₹30 கோடி மோசடி வழக்கில் பிரபல பாலிவுட் இயக்குநர் விக்ரம் பட் மற்றும் அவரது மனைவி ஸ்வேதாம்பரியை ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர். படம் எடுப்பதாக கூறி டாக்டர் அஜய் முர்தியா என்பவரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விக்ரம் பட்டின் மகள் உள்பட 8 பேர் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. அமீர்கான் நடித்த ‘குலாம்’ படத்தை இயக்கியவர் விக்ரம் பட்.
News December 8, 2025
கிருஷ்ணர் சிலையை திருமணம் செய்த இளம்பெண்

உ.பி.யை சேர்ந்த பிங்கி சர்மா (28) எனும் இளம்பெண், பகவான் கிருஷ்ணர் மீதுள்ள அதீத பக்தியால், அவரது சிலையை திருமணம் செய்து கொண்டார். பெண்ணின் குடும்பத்தார், கிராமத்தார் புடைசூழ, அனைத்து பாரம்பரிய சடங்குகளும் செய்யப்பட்டு இந்த மங்களகரமான நிகழ்வு நடந்துள்ளது. வட இந்திய முறைப்படி, கிருஷ்ணரின் சிலையை கைகளில் ஏந்தி, 7 புனித சபதங்களை ஏற்று, கிருஷ்ணரை தனது வாழ்க்கை துணையாக அவர் ஏற்றுக்கொண்டார்.


