News April 27, 2024
கண் நோய் தீர்க்கும் வீரபாண்டி கெளமாரியம்மன்

தேனி வீரபாண்டியில் அமைந்துள்ளது கெளமாரியம்மன் கோயில். மதுரையை முன்பு ஆண்ட வீரபாண்டியனுக்கு பார்வை பறிபோன நேரத்தில், தற்போது கோயில் உள்ள இடத்தில் எழுந்தருளிய கெளமாரியம்மனுக்கு வழிபாடு நடத்தி, பார்வை பெற்றார் என்பது வரலாறு. இதனால் அங்கு அவர் கோயில் கட்டினார். எனவே அவரது பெயரால் அந்த ஊர், வீரபாண்டி என அழைக்கப்படுகிறது. இங்கு வழிபட்டால், கண் நோய் தீரும் என பக்தர்கள் நம்புகின்றனர்.
Similar News
News November 14, 2025
அடுத்த மாநாட்டை அறிவித்தார் சீமான்

நாதக சார்பில் வரும் 21-ம் தேதி திருநெல்வேலியில் கடலம்மா மாநாடு நடத்தப்படும் என சீமான் அறிவித்துள்ளார். இந்த மாநாட்டில், மீனவர்கள் பிரச்னை, கடல் வளம் பாதுகாப்பு குறித்து பேசப்பட உள்ளது. முன்னதாக, சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னைகளை பேசும் பொருட்டு நாதக சார்பில் ஆடு – மாடு மாநாடு, மலைகள் பாதுகாப்பு மாநாடு, மரங்களை காப்போம் மாநாடு நடத்தப்பட்டன. அதேபோல், தண்ணீர் மாநாடும் அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 14, 2025
சொந்த திறமையால் முன்னுக்கு வர நினைக்கும் ஜேசன்

ஜேசன் சஞ்சய் படிக்கும் போதே, அவரை ஹீரோவாக்க பலரும் முயற்சி செய்ததாக, விஜய்யின் உறவினரும், நடிகருமான விக்ராந்த் தெரிவித்துள்ளார். ஆனால், இயக்குநராகத்தான் சினிமாவில் அறிமுகமாவேன் என்பதில் ஜேசன் சஞ்சய் உறுதியாக இருந்தார். தந்தையின் பெயரை பயன்படுத்தாமல், தனது தனித்திறமையால் சினிமாவில் வெற்றி பெறவே அவர் முயற்சிக்கிறார். இந்த எண்ணமே அவருக்கு வெற்றியை கொடுக்கும் என்றும் விக்ராந்த் கூறியுள்ளார்.
News November 14, 2025
மாணவர்களுக்கு கூடுதல் சிறப்பு வகுப்புகள்

B.Ed, M.Ed படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகளை முன்கூட்டிய நடத்த ஏதுவாக, கூடுதல் சிறப்பு வகுப்புகள் நடத்தி பாடங்களை முடிக்க கல்வியியல் பல்கலை., உத்தரவிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மேற்கூறிய படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் நடத்த காலதாமதமானது. இதனால், நடப்பு கல்வி ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வுகள் 2026 ஜனவரி 9-ம் தேதியில் தொடங்க பல்கலை., திட்டமிட்டுள்ளதால், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


