News November 18, 2024

வேதாரண்யத்தில் 18.8 செ.மீ மழை பதிவு

image

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில் 15.2 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. அதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில், அதிகபட்சமாக திருத்துறைப்பூண்டியில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும் புதுக்கோட்டை, தஞ்சாவூர் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

Similar News

News March 13, 2026

சற்றுநேரத்தில் வங்கிக் கணக்கில் ₹2,000

image

மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-Kisan) திட்டத்தின் கீழ் இன்று நாடு முழுவதும் 9.32 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ₹2,000 வரவு வைக்கப்படவுள்ளது. அசாம் கவுகாத்தியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் PM மோடி திட்டத்தின் 22-வது தவணையாக ₹18,640 கோடி வெளியிடுகிறார். இதற்கு விவசாயிகள், தங்களது வங்கிக் கணக்கில் E-KYC சரிபார்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம்.

News March 13, 2026

MP-க்கும், பெண்களுக்கும் பாதுகாப்பில்லை: தமிழிசை

image

MP கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் தாக்கப்பட்டதற்கு TN அரசின் பதில் என்ன என்று தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். இதே சம்பவம் வட இந்தியாவில் நடந்திருந்தால், இங்குள்ள 40 MP-யும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்திருப்பார்கள் என்றும், ஆனால் சக MP-யின் அலுவலகம் தாக்கப்பட்டதற்காக எதுவும் பேசவில்லை எனவும் கூறினார். தமிழகத்தில் MP-க்கும் பாதுகாப்பில்லை, பெண்களுக்கும் பாதுகாப்பில்லை எனவும் சாடினார்.

News March 13, 2026

இந்த வயதில் முதலீடு ரொம்ப முக்கியம்!

image

பொதுவாக 40-50 வயதுக்குள் எடுக்கப்படும் நிதி முடிவுகள் ஒருவரின் ஓய்வு வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதனால்தான் அந்த வயதில் வேலை மாறும்போது PF-ஐ திரும்பப் பெற வேண்டாம் என்றும், அவசரமாக ஒன்றுக்கு மேற்பட்ட சொத்துக்களை வாங்க வேண்டாம் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பணவீக்கத்தால் பாதிக்கப்படாத சொத்துக்களில் முதலீடு செய்யும்படியும் அறிவுறுத்துகின்றனர்.

error: Content is protected !!