News May 2, 2024

வேதாந்தா ₹1.66 லட்சம் கோடி முதலீடு செய்ய திட்டம்

image

வேதாந்தா குழுமம் அடுத்த 4 ஆண்டுகளில் இந்தியாவில் ₹1.66 லட்சம் கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக, அதன் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வமாக இருப்பதாகக் கூறிய அவர், தேர்தலுக்கு பிறகு வெளிநாட்டினரின் முதலீடு அதிகரிக்கும் என நம்பிக்கைத் தெரிவித்தார். மேலும் அந்நிறுவனத்திற்கு மொத்தமாக ₹1,200 கோடி கடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Similar News

News April 9, 2026

புதுச்சேரி வாக்காளர்களுக்கு மோடி வேண்டுகோள்

image

புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அம்மாநில வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என PM மோடி அழைப்பு விடுத்துள்ளார். குறிப்பாக, இளைஞர்கள் & பெண்கள் தங்கள் வாக்குகளை செலுத்தி ஜனநாயக நடைமுறையை வலுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியதுடன், மாநிலத்தின் எதிர்காலத்தை வடிவமைக்க ஒவ்வொரு வாக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

News April 9, 2026

மீனவர்கள் மீண்டும் கைது.. அதிகாலையில் பதற்றம்!

image

தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ஒரு படகு, மீன்பிடி வலைகள் உள்ளிட்ட உடமைகளையும் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். மீனவர்களை அத்துமீறி கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து வருவதாக கண்டித்துள்ள ராமேஸ்வரம் மீனவர்கள், போராட்டத்தில் குதிக்க முடிவு செய்துள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

News April 9, 2026

உதயநிதியின் அரசியலுக்காக நடந்த கலவரம்: ஆதவ்

image

கரூர் விவகாரத்தில் செந்தில் பாலாஜிக்கு தொடர்புள்ளதாக CBI அதிகாரிகளிடம் கூறியிருந்ததை பற்றி ஆதவ் அர்ஜுனாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், உதயநிதியின் அரசியலுக்காக செந்தில் பாலாஜி, அன்பில் வழியே நடத்தப்பட்ட திட்டமிட்ட சதிச்செயல் தான் கரூர் சம்பவம் என கூறியுள்ளார். அவர்கள் சின்னதாக கலவரம் செய்ய நினைத்ததாகவும், ஆனால், அது அவர்களுக்கே பின்விளைவை ஏற்படுத்திவிட்டது எனவும் பேசியுள்ளார்.

error: Content is protected !!