News April 8, 2025
வருண் குமார் வழக்கு… சீமானுக்கு பிடிவாரண்ட்?

டிஐஜி வருண் குமார் தாக்கல் செய்த வழக்கு நேற்று திருச்சி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஆனால் சம்மன் கொடுக்கப்பட்ட சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. சீமான் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக அனுமதியளிக்க அவரது வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். அதனை ஏற்ற நீதிபதி, சீமான் இன்று காலை 10:30 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் எனவும் எச்சரித்தார்.
Similar News
News April 8, 2025
3 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

அடுத்த 3 நாள்களுக்கு மாநிலம் முழுவதும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் (MET) தெரிவித்துள்ளது. மேலும், தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்ததாகவும், இது புயலாக மாற வாய்ப்பில்லை என்றும் கணித்துள்ளது. அதேநேரம் ஒரு சில இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News April 8, 2025
உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்த 10 மசோதாக்கள் என்ன?

கவர்னருக்கு பதில் முதல்வரை பல்கலை., வேந்தராக்குவதற்கான மசோதா, கால்நடை பல்கலை திருத்த மசோதா, மீன்வள பல்கலை திருத்த மசோதா, அம்பேத்கர் சட்டப் பல்கலை, TN MGR மருத்துவ பல்கலைக்கு முதல்வரை வேந்தராக்கும் மசோதா, வேளாண் பல்கலை, தமிழ் பல்கலை சட்டத் திருத்த மசோதா, TN பல்கலைகள் 2ம் திருத்த மசோதா, கால்நடை 2ம் திருத்த மசோதா, மீன்வள பல்கலை 2வது திருத்த மசோதா ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
News April 8, 2025
கவர்னர் பதவி விலகக் கோரி வலுக்கும் குரல்கள்!

வரலாற்றில் முதல்முறையாக மசோதாக்கள் மீது முடிவெடுக்க TN கவர்னருக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்து அளித்த தீர்ப்பு, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என CM ஸ்டாலின் வரவேற்றுள்ளார். மேலும், கவர்னர் நிறுத்தி வைத்த 10 மசோதக்களுக்கும் உச்ச நீதிமன்றமே ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், அவர் பதவி விலக வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன.