News November 24, 2024
VAO வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் வாலிபர் கைது

பேட்டை காந்திநகர் ஐஓபி காலனி தெருவை சேர்ந்த VAO அந்தோணி தங்கராஜ் என்பவர் வீட்டில் கடந்த 6 ஆம் தேதி 51 பவுன் நகை திருடுபோனது. இது குறித்து பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து 2 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற ரகசிய தகவல் கிடைத்தது. கேரளா விரைந்த போலீசார் மதனராய் என்ற வாலிபரை கைது செய்தனர்.
Similar News
News August 11, 2025
நெல்லை: ரயில் பயணிகளுக்கு சூப்பர் நியூஸ்!

அக்டோபர் 13 முதல் 26 வரை ரயில் பயணம் செய்பவர்கள் நவம்பர் 17 முதல் டிசம்பர் 1 வரை ரிட்டன் பயணம் 2ம் வகுப்பு டிக்கெட் எடுத்தால் அவர்களுக்கு 20% பயண கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. நெல்லையிலிருந்து சென்னை, மும்பை, பெங்களூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு இது பொருந்தும். SHARE பண்ணுங்க!
News August 11, 2025
நெல்லை மாநகராட்சி கூட்டம் மேயர் அழைப்பு

இன்று (11.08.2025) காலை 11:00 மணியளவில் மாநகராட்சி மைய அலுவலக இராஜாஜி மண்டப கூட்ட அரங்கில் மேயர் ராமகிருஷ்ணன் தலைமையில் மாமன்ற கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ஆணையாளர் மற்றும் துணை மேயர் ராஜி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் விவாதிக்கப்பட உள்ளதால் கவுன்சிலர்கள் பங்கேற்க வேண்டும் என மேயர் அழைப்பு கொடுத்துள்ளார்.
News August 10, 2025
ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் உயிரிழப்பு

கருங்குளம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் பாளை திருச்செந்தூர் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது எதிரே வந்த ஆட்டோ மீது எதிர்பாராத விதமாக பைக் மோதியதில் பாலமுருகன் தூக்கி வீசப்பட்டார். பலத்த காயமடைந்த பாலமுருகனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலமுருகன் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுக்குறித்து சிவந்திப்பட்டி போலீசார் விசாரணை.