News November 24, 2024

VAO வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் வாலிபர் கைது

image

பேட்டை காந்திநகர் ஐஓபி காலனி தெருவை சேர்ந்த VAO அந்தோணி தங்கராஜ் என்பவர் வீட்டில் கடந்த 6 ஆம் தேதி 51 பவுன் நகை திருடுபோனது. இது குறித்து பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து 2 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற ரகசிய தகவல் கிடைத்தது. கேரளா விரைந்த போலீசார் மதனராய் என்ற வாலிபரை கைது செய்தனர்.

Similar News

News December 6, 2025

நெல்லையில் ரூ.5 லட்சம் இலவச காப்பீடு – Apply!

image

நெல்லை மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!

News December 6, 2025

நெல்லை: டிகிரி போதும்., ரூ.1,20,000 சம்பளத்தில் அரசு வேலை ரெடி!

image

நெல்லை மக்களே, இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் காலியாக உள்ள 64 Junior Manager பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 40 வயகுட்பட்ட டிப்ளமோ, ஏதாவது ஒரு டிகிரி, B.E/B.Tech படித்தவர்கள் டிச 17க்குள் <>இங்கு க்ளிக்<<>>செய்து விண்ணபிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.30,000 – ரூ.1,20,000 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் ஆட்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை எல்லோருக்கும் SHARE செய்யுங்க.

News December 6, 2025

நெல்லை: விவசாயி விஷம் குடித்து தற்கொலை

image

சீவலப்பேரி பொட்டல் பச்சேரி பகுதியை சேர்ந்த அந்தோனி மகன் மிக்கேல் (47). விவசாயியான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடும்ப பிரச்சனை காரணமாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இவரை மீட்ட உறவினர்கள் பாளை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சீவலப்பேரி போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!