News November 24, 2024
VAO வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் வாலிபர் கைது

பேட்டை காந்திநகர் ஐஓபி காலனி தெருவை சேர்ந்த VAO அந்தோணி தங்கராஜ் என்பவர் வீட்டில் கடந்த 6 ஆம் தேதி 51 பவுன் நகை திருடுபோனது. இது குறித்து பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து 2 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற ரகசிய தகவல் கிடைத்தது. கேரளா விரைந்த போலீசார் மதனராய் என்ற வாலிபரை கைது செய்தனர்.
Similar News
News November 22, 2025
ஊர்க்காவல் படைக்கு இன்று ஆட் தேர்வு; போலீஸ் அறிவிப்பு

நெல்லை மாநகர காவல் துறையில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு பாளை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நாளை காலை 7:00 மணி முதல் 10 மணி வரை நடைபெறுகிறது. இதில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பங்கேற்கலாம். 18 முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். மாநகர எல்லையில் வசிக்க வேண்டும். பாஸ்போர்ட் சைஸ் போட்டா கல்வி சான்று போன்ற ஆவணங்களை கொண்டு வர வேண்டுமென மாநகர காவல் துறை அறிவித்துள்ளது.
News November 22, 2025
வீட்டுக்கு வந்தவர் 16 பவுன் நகையுடன் ஓட்டம்: கேரளாவில் சிக்கினார்

சுத்தமல்லியை சேர்ந்தவர் சுரேஷ் இவரது மனைவி செல்வி இவரது வீட்டுக்கு உறவினரான கங்காதேவி என்பவர் தனது ஆண் நண்பர் ஐயப்பன் என்பவருடன் வந்துள்ளார். திடீரென இருவரும் அங்கிருந்து சென்று விட்டனர். அதே நேரத்தில் பீரோவில் இருந்த 16 பவுன் நகை திருடு போனது. இது குறித்து சுத்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி கேரளாவில் பதுங்கி இருந்த ஐயப்பனை கைது செய்து அவரிடமிருந்து தங்க நகையை மீட்டனர்.
News November 22, 2025
நெல்லையில் ரூ.14.77 கோடிக்கு அடிக்கல் நாட்டல்

நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி விஜயாபதி ஊராட்சியில் நேற்று (நவ. 21) காலை 10.45 மணிக்கு ரூபாய் 14.77 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மையம் அமைப்பதற்காக தமிழக சட்டபேரவை தலைவர் அப்பாவு மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவரும் நெல்லை பாராளுமன்ற உறுப்பினருமான C.ராபர்ட் புரூஸ் இணைந்து அடிக்கல் நாட்டினர். உடன் கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


