News March 18, 2024

வானூர்: கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை

image

நாடாளுமன்ற தேர்தலையொட்டி விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தலைமையில் வானூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று(மார்ச் 17) நடந்தது. இதில் கலால் உதவி ஆணையர் முருகேசன், கோட்டக்குப்பம் டிஎஸ்பி சுனில், கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையர் புஹேந்திரி, வானூர் வட்டாட்சியர் நாராயணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பாதுகாப்பு, தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

Similar News

News September 3, 2025

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (செப்.3) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ள இடங்கள்

▶️ மயிலம்
▶️ அய்யன்கோயில்பட்டு, கோலியனூர்
▶️ அருங்குறுக்கை, திருவெண்ணெய்நல்லூர்
▶️ முகையூர்
▶️ நடுக்குப்பம், கோட்டக்குப்பம்
▶️ அனந்தபுரம்
பொதுமக்கள் நேரில் சென்று மனு அளித்து பயன்பெறலாம்

News September 3, 2025

தாம்பரம் – விழுப்புரம் ரயில் சேவை பகுதியாக ரத்து.

image

பராமரிப்புப் பணிகள் காரணமாக, தாம்பரத்திலிருந்து காலை 9.45 மணிக்கு விழுப்புரம் செல்லும் மெமு ரயில் செப்டம்பர் 6, 9, 13, 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் முண்டியப்பாக்கத்துடன் நிறுத்தப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதே நாள்களில், விழுப்புரத்திலிருந்து நண்பகல் 1.40 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் மெமு ரயில் விழுப்புரம் என்பதற்குப் பதிலாக முண்டியப்பாக்கத்திலிருந்து புறப்படும்.

News September 2, 2025

விழுப்புரம் – திருப்பதி ரயில் சேவை பகுதியாக ரத்து.

image

விழுப்புரம் – திருப்பதி செல்லும் விரைவு ரயில் (வண்டி எண் 16854), செப்டம்பர் 3, 5, 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாகப் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதனால், காட்பாடி – திருப்பதி இடையேயான சேவை ரத்து செய்யப்பட்டு, ரயில் காட்பாடியுடன் நிறுத்தப்படும். பின்னர், அங்கிருந்து மறு மார்க்கமாக விழுப்புரம் நோக்கி மாலை 4:40 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

error: Content is protected !!