News March 18, 2024

வானூர்: கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை

image

நாடாளுமன்ற தேர்தலையொட்டி விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தலைமையில் வானூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று(மார்ச் 17) நடந்தது. இதில் கலால் உதவி ஆணையர் முருகேசன், கோட்டக்குப்பம் டிஎஸ்பி சுனில், கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையர் புஹேந்திரி, வானூர் வட்டாட்சியர் நாராயணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பாதுகாப்பு, தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

Similar News

News December 18, 2025

விழுப்புரம்: மதுபோதையில் பெண்ணிடம் அத்துமீறல்!

image

விழுப்புரம் அருகே உள்ள கோனூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் மனைவி சுகந்தி (வயது 36). இவர் வீட்டில் தனியாக இருந்த போது, அதே கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் (38) என்பவர் மது போதையில் அத்துமீறி வீட்டிற்குள் சென்று, அவரை திட்டி மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து சுகந்தி கொடுத்த புகாரின்பேரில் ராமலிங்கத்தை காணை போலீசார் நேற்று கைது செய்தனர்.

News December 18, 2025

பாலியல் தொழிலுக்கு சிறுமியை கட்டாயபடுத்திய சம்பவம்: 7 ஆண்டு சிறை

image

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் காலனி கடையில் வேலை பார்த்து வந்த 14 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் தொழில் ஈடுபடுமாறு வற்புறுத்திய குற்றத்துக்காக, சிட்டாம்பூண்டி பகுதியைச் சேர்ந்த ராணி மற்றும் கொளப்பாறையை சேர்ந்த நாகம்மாள் ஆகிய இருவருக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5000 அபராதமும் விதித்து போக்ஸோ நீதிமன்ற நீதிபதி வினோதா இன்று தீர்ப்பு வழங்கினார்.

News December 18, 2025

விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!