News March 18, 2024

வானூர்: கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை

image

நாடாளுமன்ற தேர்தலையொட்டி விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தலைமையில் வானூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று(மார்ச் 17) நடந்தது. இதில் கலால் உதவி ஆணையர் முருகேசன், கோட்டக்குப்பம் டிஎஸ்பி சுனில், கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையர் புஹேந்திரி, வானூர் வட்டாட்சியர் நாராயணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பாதுகாப்பு, தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

Similar News

News December 6, 2025

விழுப்புரம்: Whats App மூலம் ஆதார் அட்டை!

image

விழுப்புரம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை (+91 9013151515) சேமிக்க வேண்டும். இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக “HAI” என SMS அனுப்பினால் போதும். அதுவே ஆதார் அட்டையை பெற வழிகாட்டும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News December 6, 2025

விழுப்புரம்:விவசாயியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு!

image

விழுப்புரம் அருகே பில்லூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி சுப்பிரமணி பேரன் மலட்டாற்றில் குளிக்க சென்ற நிலையில் கண்டித்து அடித்துள்ளார். இதை கேள்விப்பட்ட சுப்பிரமணியின் மருமகள் பானுமதி, அவரது உறவினர்கள் இளையபெருமாள், பார்த்தசாரதி ஆகிய 4 பேரும் சேர்ந்து சுப்பிரமணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் அவரை தாக்கினர். புகாரின் பேரில் 4 பேர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

News December 6, 2025

விழுப்புரத்தில் தாய் திட்டியதால் மகளுக்கு நேர்ந்த விபரீதம்!

image

விழுப்புரம் கணபதி நகரைச் சேர்ந்த ஷபி மகள் ரஷிதாபேகம் ரஷிதா பேகத்துக்கு அவ்வப்போது வலிப்பு ஏற்படுமாம். இதற்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் டிச. 2-ஆம் தேதி வீட்டில் வேலை செய்யாமல் ரஷிதா இருந்த நிலையில் தாய் திட்டியதால் வலிப்பு நோய் மாத்திரை அதிகமாக உட்கொண்டு உயிரிழந்துள்ளார்.விழுப்புரம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!