News April 28, 2024

6 நிறுவனங்களின் மதிப்பு ₹1.30 லட்சம் கோடி உயர்வு

image

இந்தியாவில் 6 நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பு ஒரே வாரத்தில் ₹1.30 லட்சம் கோடி உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக, எஸ்பிஐ வங்கியின் மூலதன மதிப்பு ₹45,158.54 கோடி உயர்ந்து, ₹7,15,218.40 கோடியாக உள்ளது. ஐசிஐசிஐ வங்கியின் மூலதன மதிப்பு ₹28,726.33 கோடி உயர்ந்து, ₹7,77,750.22 கோடியாக உள்ளது. அதேபோல், ஏர்டெல், ஐடிசி, எல்ஐசி, இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனங்களின் மதிப்பும் வெகுவாக உயர்ந்துள்ளது.

Similar News

News January 26, 2026

70% வரி குறைப்பு.. கார்கள் விலை குறைகிறது

image

இந்தியா, ஐரோப்பிய யூனியன் இடையே வரலாற்று சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகிறது. இதில், ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட வகை கார்கள் மீதான வரி 110%-ல் இருந்து 40% ஆக குறைக்கப்படவுள்ளது. ₹16 லட்சத்துக்கு மேல் இறக்குமதி விலை உள்ள கார்களுக்கு இது பொருந்தும். இதனால் பென்ஸ், BMW உள்ளிட்ட கார்களின் விலை இந்தியாவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News January 26, 2026

இந்திய ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

image

காயம் காரணமாக NZ T20I தொடரில் இருந்து விலகிய, திலக் வர்மா 5-வது T20I-க்குள் முழு உடற்தகுதி பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன. இதனால், அவர் வரும் பிப்ரவரி 4-ம் தேதி, SA-க்கு WC T20I பயிற்சி ஆட்டத்தில் விளையாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. T20-ல் அசுர பலத்துடன் உள்ள அணிக்கு, திலக் வர்மாவின் வருகை மேலும் பலத்தை அதிகரிக்க செய்யும்.

News January 26, 2026

இந்தியாவின் சிறப்பு விருந்தினர்கள்.. யார் தெரியுமா?

image

இன்று டெல்லியில் நடைபெற்று வரும் குடியரசு தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட இவர்கள் யார் என தெரியுமா? PM மோடிக்கு வலது புறமாக நிற்பவர் ஊர்சுலா வாண்டர் லியன்(67). ஜெர்மனி மருத்துவரான இவர், 2019-ம் ஆண்டு முதல் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக உள்ளார். இடது புறம் உள்ளவர் அன்டோனியோ கோஸ்டா(64). போர்த்துகீசிய வழக்கறிஞரான இவர், 2024 முதல் ஐரோப்பிய கவுன்சில் தலைவராக உள்ளார்.

error: Content is protected !!