News March 24, 2025
வள்ளலார் பொன்மொழிகள்

*உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்கு பதிலாக, பசியில் இருப்போருக்கு வயிறார உணவு கொடுங்கள். அதுவே கடவுளுக்கு மகிழ்ச்சி கொடுக்கும். *பிறருடைய பசியைப் போக்குவதோடு மட்டும் ஒருவனுடைய ஒழுக்கமும் கடமையும் முடிந்து விடாது. பிறருக்கு ஏற்படும் துன்பங்களை களையவும் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும். *உடலை வருத்தி விரதம் இருப்பதைவிட, யாரையும் துன்புறுத்தாமல் இருப்பதே சிறந்தது.
Similar News
News March 26, 2025
ரேஷன் அட்டைதாரர்களே.. உடனே பண்ணுங்க

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் கை ரேகையை பதிவு செய்ய வேண்டும் என்றும் தவறும்பட்சத்தில் அட்டை ரத்தாகும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக கை ரேகைப் பதிவு நடைபெற்று வந்தாலும், இன்னும் பலர் பதிவு செய்யாமல் உள்ளனர். இதனையடுத்து, வரும் 31ஆம் தேதி அதற்கான கடைசி தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உங்கள் ரேகை பதிவாகியிருக்கிறதா என்று செக் பண்ணிக்கோங்க.
News March 26, 2025
நடிகராக விரும்பாத மனோஜ்…!

தந்தை பாரதிராஜா இயக்கத்தில் முதன்முதலாக தாஜ்மஹால் படத்தில் நடித்தபோது நடந்த சம்பவத்தை பழைய பேட்டி ஒன்றில் <<15885902>>மனோஜ்<<>> நினைவுகூர்ந்தார். அப்போது, ‘அப்பாவுக்கு என்னை நடிகராக்கி பார்க்க ஆசை இருந்தது. ஆனால், நடிகராக வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை’ என அவர் கூறினார். கொஞ்சமும் இஷ்டம் இல்லாமல்தான் தாஜ்மஹால் படத்தில் நடித்ததாகவும் மனோஜ் தெரிவித்தார்.
News March 26, 2025
‘ஆசை’ பட பாணியில் அதிர்ச்சி… கம்பி எண்ணும் கணவர்!

அஜித்தின் ஆசை படத்தில் மனைவியின் தங்கை மீது மோகம் கொண்ட பிரகாஷ்ராஜ், மனைவியை கொலை செய்வார். அதே போன்ற சம்பவம் உ.பி.யில் நடந்துள்ளது. திருமணமாகி 5 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்த அங்கித் குமார், தனது மனைவியின் தங்கையை மணக்க ஆசைப்பட்டுள்ளார். இதற்கு இடையூறாக இருந்த மனைவி கிரணை நண்பர் உதவியுடன் அவர் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளது. கண்ணை மறைத்த ஆசையால் அங்கித் கம்பி எண்ணுகிறார்.