News May 1, 2024

வாழ்வை செம்மையாக்கும் வல்லக்கோட்டை முருகன்

image

ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் என்றதுமே ஒருவித பதற்றத்துக்கு ஆளாகிவிடுகிறோம். ஏனென்றால், கல்யாணத் தடைக்குக் காரணமாகிவிடுகிறது இந்த தோஷம். செவ்வாய் தோஷத்தால் மனம் வாடுவோர், முருகனுக்கு விரதமிருந்து, வல்லக்கோட்டை சுப்பிரமணியன் கோயிலுக்கு சென்று விருட்சிப்பூ சாற்றி, ஆறுமுக விளக்கேற்றி, தேன் கலந்த தினைமாவு படைத்து வணங்கினால் அத்தோஷ பாதிப்புகள் குறைந்து, வாழ்வு செம்மையுறும் என்பது ஐதீகம்.

Similar News

News March 28, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அமைச்சியல் ▶அதிகாரம்: அமைச்சு ▶குறள் எண்: 646 ▶குறள்: வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல் மாட்சியின் மாசற்றார் கோள். ▶பொருள்: மற்றவர்கள் விரும்பிக் கேட்டு உணரும்படியாகக் கருத்துக்களைச் சொல்வதும், மற்றவர்கள் கூறும் சொற்களின் பயனை ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதும் அறிவுடையார் செயலாகும்.

News March 28, 2026

₹2.38 லட்சம் கோடிக்கு ஆயுதம்: மத்திய அரசு ஒப்புதல்

image

இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்த ராஜ்நாத் சிங் தலைமையிலான DAC, ₹2.38 லட்சம் கோடி மதிப்பிலான ஆயுதங்களை கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. இதில் போக்குவரத்து விமானங்கள், S-400 வான் பாதுகாப்பு அமைப்பு, டிரோன்கள், டாங்கி எதிர்ப்பு அமைப்புகள், தொலைவிலிருந்து இயக்கப்படும் தாக்குதல் விமானங்கள், தனுஷ் துப்பாக்கி அமைப்பு மற்றும் வான்வழி கண்காணிப்பு அமைப்பு ஆகியவை அடங்கும்.

News March 28, 2026

Otrovert.. இது தெரியுமா உங்களுக்கு?

image

Otrovert என்பது Introvert-க்கும், Extrovert-க்கும் நடுவில் இருக்கும் ஒரு தனிப்பட்ட மனநிலை. இவர்கள் அனைவருடனும் இயல்பாக பழகினாலும், உள்ளுக்குள் தனிமையாகவே உணர்வார்கள். பேசும் திறன் இருந்தாலும், எல்லோருடனும் நெருக்கமாக பழக விரும்பமாட்டார்கள். அவர்களுக்கு அமைதியான சூழல் மிகவும் முக்கியம். இது ஒரு குறை அல்ல; மாறாக, தனித்துவமான ஒரு குணம் என்று அமெரிக்க மனநல மருத்துவர் ராமி கமின்ஸ்கி கூறுகிறார்.

error: Content is protected !!