News April 22, 2025

வெயில்: நாளை இந்த நேரத்தில் வெளியே வராதீங்க

image

தமிழகத்தில் நாளையும், நாளை மறுநாளும் வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இயல்பை விட வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம். எனவே, காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்கவும்.

Similar News

News November 8, 2025

அரசியலில் விஜய் ஒரு கத்துக்குட்டி: வீரலட்சுமி

image

தவெக செய்த ரெளடிசமே கரூரில் 41 பேர் உயிரிழக்க காரணம் என தமிழர் முன்னேற்ற படை வீரலட்சுமி சாடியுள்ளார். அரசியலில் விஜய் ஒரு கத்துக்குட்டி என விமர்சித்த அவர், களத்தில் நின்று மக்களை காப்பாற்றுபவர்களே நிஜ ஹீரோ என்றும், கரூர் துயருக்கு பிறகு தவெகவில் அனைவருமே ஓடி ஒளிந்துகொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும், மக்களுக்காக புரட்சிகரமான போராட்டம் நடத்தி, விஜய் சிறை செல்ல தயாரா என்று அவர் கேள்வி எழுப்பினார்.

News November 8, 2025

சிவப்பு ரோஜாவாக சிலிர்ப்பூட்டும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்

image

விக்ரம் வேதா, இறுகப்பற்று படங்களில் கவனம் ஈர்த்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை போட்டோஷூட் பிரியர் என்றே சொல்லலாம். வாரத்திற்கு 2-3 முறை புது புதிதாக போட்டோக்களை SM-ல் பதிவிடுவார். இந்நிலையில், சிவப்பு நிறத்தில் சற்று கவர்ச்சிகரமான ஆடை அணிந்து போட்டோஷூட் நடத்தியுள்ளார். அதை SM-ல் அவர் பதிவிடவே சிவப்பு ரோஜாவாக சிலிர்ப்பூட்டுகிறீர்கள் என கமெண்ட் செய்கின்றனர். போட்டோக்களை SWIPE செய்து பார்க்கவும்.

News November 8, 2025

போனுக்கு அடிமையானால் இப்படித்தான் மாறுவீர்கள்!

image

ஒருவர் நீண்ட நேரமாக ஒரு இடத்தில் இருந்து நகராமல், போனையே பார்த்து கொண்டு இருந்தால், அவர் 25 ஆண்டுகளுக்கு பிறகு எப்படி உருமாறுவார் என்பதை WeWard எனும் ஆப், போட்டோவாக வெளியிட்டுள்ளது. WHO உள்ளிட்ட சுகாதார நிறுவனங்களிடம் தரவுகள் பெறப்பட்டு, AI மூலம் இந்த போட்டோ உருவாக்கப்பட்டுள்ளது. கூன் விழுவது, முடி உதிர்வது, – வயதுக்கு மீறிய தோற்றம் உள்ளிட்ட பல பிரச்னைகள் ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!