News April 22, 2025
வெயில்: நாளை இந்த நேரத்தில் வெளியே வராதீங்க

தமிழகத்தில் நாளையும், நாளை மறுநாளும் வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இயல்பை விட வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம். எனவே, காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்கவும்.
Similar News
News December 16, 2025
₹23.75 டூ ₹7 கோடி.. RCB-ல் வெங்கடேஷ் ஐயர்

ஐபிஎல் மினி ஏலத்தில், இந்திய வீரர் வெங்கடேஷ் ஐயரை ₹7 கோடிக்கு RCB வாங்கியுள்ளது. 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் அவரை ₹23.75 கோடிக்கு KKR வாங்கியிருந்தது. வெங்கடேஷ் ஐயரின் ஃபார்ம் சற்று குறைந்ததால், ஏலத்திற்கு முன்பாக KKR அவரை கழற்றிவிட்டது. 2021 முதல் KKR அணிக்காக விளையாடிய அவர், 2026-ல் RCB ஜெர்ஸியை அணியவுள்ளார். பிளேயிங் 11-ல் தேவ்தத் படிக்கலுக்கு பதிலாக வெங்கடேஷ் ஐயர் களமிறங்க வாய்ப்புள்ளது.
News December 16, 2025
வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் PHOTOS

இந்திய ரயில்வே, முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. பாட்னா–டெல்லி ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில், மணிக்கு 160 கி.மீ வேகத்தில் இயக்கப்பட்டு, சுமார் 1,000 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 8 மணி நேரத்தில் கடக்கும். இந்த ரயில், 16 பெட்டிகளுடன் மொத்தம் 827 படுக்கை வசதிகளைக் கொண்டிருக்கும். மேலே உள்ள ஸ்லீப்பர் ரயிலின் போட்டோக்களை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 16, 2025
பொங்கல் பரிசுத் தொகுப்பு.. முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ₹750 மதிப்புள்ள அரிசி, வெல்லம் உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என CM ரங்கசாமி ஏற்கெனவே அறிவித்திருந்தார். இந்நிலையில், ஜன.3-ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு விநியோகம் தொடங்கும் என தற்போது அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்திலும் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


