News April 22, 2025
வெயில்: நாளை இந்த நேரத்தில் வெளியே வராதீங்க

தமிழகத்தில் நாளையும், நாளை மறுநாளும் வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இயல்பை விட வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம். எனவே, காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்கவும்.
Similar News
News October 19, 2025
பிரதீப் ரங்கநாதனின் சம்பளம் இத்தனை கோடியா?

‘கோமாளி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், ‘லவ் டுடே’ படத்தின் மாபெரும் வெற்றியால் பாக்ஸ் ஆபிஸ் இயக்குநரானார். ₹5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ₹100 கோடி வசூலை குவித்தது. இப்படத்திற்காக முதலில் ₹70 லட்சம் சம்பளம் வாங்கிய பிரதீப், மெகாஹிட்டால் கூடுதலாக ₹80 லட்சம் பெற்றுள்ளார். டிராகன், LIK ஆகிய இரு படங்களுக்கும் சேர்த்து ₹17 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.
News October 19, 2025
டெல்லியின் பெயரை மாற்ற கோரும் VHP

டெல்லியின் பெயரை ‘இந்திரபிரஸ்தம்’ (Indraprastha) என மாற்ற வலியுறுத்தி, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு, டெல்லி கலாசார துறை அமைச்சர் கபில் மிஷ்ராவுக்கு கடிதம் எழுதியுள்ளது. இதன் மூலம் தலைநகரை, அதன் பண்டைய வரலாறு & கலாசாரத்துடன் தொடர்புபடுத்த முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் ஏர்போர்ட், ரயில் நிலையத்தின் பெயரை மாற்றவும் VHP கோரியுள்ளது. டெல்லியில் பாஜக ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
News October 19, 2025
20 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்

மஞ்சள் அலர்ட்டால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று இரவு 10 மணி வரை, செங்கல்பட்டு, சென்னை, கோவை, திண்டுக்கல், காஞ்சி, குமரி, மதுரை, நாகை, புதுக்கோட்டை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, நீலகிரி, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை, திருப்பூர், தி.மலை, விருதுநகரில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதனால், தீபாவளி ஷாப்பிங் சென்றவர்கள் கவனமுடன் வீடு திரும்புங்க!