News April 22, 2025
வெயில்: நாளை இந்த நேரத்தில் வெளியே வராதீங்க

தமிழகத்தில் நாளையும், நாளை மறுநாளும் வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இயல்பை விட வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம். எனவே, காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்கவும்.
Similar News
News November 21, 2025
ஜடேஜாவை CSK விட்டது ஆச்சரியமாக உள்ளது: கும்ளே

ஜடேஜா போன்று ஒரு நபரை CSK டிரேட் செய்தது ஆச்சரியம் அளிப்பதாக அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். வழக்கமாக சென்னை அணி இதுபோன்று செய்து பார்த்ததில்லை என தெரிவித்த அவர், அதை அவர்கள் செய்திருக்க கூடாது எனவும் கூறியுள்ளார். CSK , ராஜஸ்தானின் டிரேட் IPL-லில் முக்கியமானது என்றும், ஆனால் RR ஜடேஜாவுக்கு கேப்டன் பொறுப்பு கொடுக்குமா என்பது முக்கியமான கேள்வி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News November 21, 2025
வரலாற்றில் இன்று

1947 – இந்தியா விடுதலை அடைந்த பின்னர் முதன் முறையாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டது
1963 – இந்தியாவின் முதலாவது ஈரடுக்கு உளவு ஏவுகணை நைக்-அப்பாச்சி ஏவப்பட்டது.
1991 – சுதந்திர போராட்ட வீரர் தி. சு.அவிநாசிலிங்கம் மறைந்தார்.
2022 – தமிழறிஞர் ஔவை நடராசன் மறைந்த தினம்.
News November 21, 2025
NATIONAL 360°: வேன் மீது ரயில் மோதியதில் 3 பேர் பலி

*உ.பி., பள்ளி ஒன்றில் கேஸ் லீக்கின் காரணமாக 16 மாணவர்கள் மயங்கி விழுந்தனர். *டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் மாணவன் தற்கொலை செய்துகொண்ட நிலையில் 4 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். *திரிபுராவில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது வேன் மீது ரயில் மோதியதில் 3 பேர் பலியாகினர். *மும்பையில் காற்றுமாசு வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறது என்பதை கண்காணிக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.


