News April 22, 2025
வெயில்: நாளை இந்த நேரத்தில் வெளியே வராதீங்க

தமிழகத்தில் நாளையும், நாளை மறுநாளும் வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இயல்பை விட வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம். எனவே, காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்கவும்.
Similar News
News November 22, 2025
ஏ.ஆர்.ரகுமான் விவாகரத்துக்கு இதுதான் காரணமா?

எங்கு போனாலும் ரசிகர்களால் பிரைவசி இல்லை என்பதால் அதன் தாக்கம் குடும்பத்தின் மேல் விழுந்துள்ளதாக ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார். சிறு வயதிலிருந்தே குழந்தைகளுடன் தனிப்பட்ட நேரத்தை செலவிடமுடியாமல் இருந்ததாக கூறிய அவர், குடும்பமாக ஒன்று கூடுவதும், ஒரே டேபிளில் உட்கார்ந்து உணவருந்துவதும் மிகக் குறைவு என கூறிவுள்ளார். இந்நிலையில், இதனால்தான் அவருக்கு விவாகரத்து ஆனதா என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.
News November 22, 2025
உக்ரைனை மிரட்டும் அமெரிக்கா

ரஷ்ய போர் நிறுத்தத்திற்கு தாங்கள் முன்மொழிந்துள்ள நிபந்தனைகளுக்கு இணங்குமாறு உக்ரைனை USA மிரட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இணங்க மறுத்தால் ஆயுதங்கள், உளவு தகவல்கள் பகிர்வது நிறுத்தப்படும் என எச்சரிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தங்களை கலந்து ஆலோசிக்காமல், இந்த ஒப்பந்தம் முன்மொழியப்பட்டுள்ளதாக உக்ரைன் குற்றஞ்சாட்டி வருகிறது. USA நிபந்தனைகளின் படி, உக்ரைன் சில பகுதிகளை இழக்க நேரிடும்.
News November 22, 2025
பாஜக ‘P’ டீம்: தமிழிசை

தமிழகத்தின் 2026 தேர்தல் பிஹார் தேர்தல் போல இருக்கும் என தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். விஜய், ஸ்டாலின் கூறுவது போல பாஜக ஏ டீம், பி டீ எல்லாம் கிடையாது எனவும் நாங்கள் ’P’ டீம், அதாவது People’s Team என்றும் கூறியுள்ளார். மேலும், வரும் தேர்தலில் பாஜக இரட்டை இலக்க MLA-க்களை பெறும் என்ற அவர், தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் எனவும் உறுதியாக தெரிவித்துள்ளார்.


