News April 22, 2025

வெயில்: நாளை இந்த நேரத்தில் வெளியே வராதீங்க

image

தமிழகத்தில் நாளையும், நாளை மறுநாளும் வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இயல்பை விட வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம். எனவே, காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்கவும்.

Similar News

News December 9, 2025

#KovaiBiggestLandSCAM.. பின்னணி என்ன?

image

கோவையில் ₹3,500 கோடி மதிப்பிலான சொத்தை அபகரித்ததாக சிங்காநல்லூர் அதிமுக MLA ஜெயராம் மீது புகார் எழுந்துள்ளது. ஜி-ஸ்கொயர் நிறுவனம் தனது இந்த புகாரை செய்தித்தாளில் பொது அறிவிப்பாகவும் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், திமுக ஆதரவாளர்கள் பலரும் #Kovaibiggestlandscam என்ற ஹேஷ்டேக்கை X தளத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர். நேற்று அமைச்சர் <<18501393>>நேரு மீதான ED-ன்<<>> ஊழல் புகாரை அதிமுகவினர் விமர்சித்து வந்தனர்.

News December 9, 2025

சன்னிலியோன் போட்டோவை வைத்து விளையாடிய அஸ்வின்

image

IPL மினி ஏலம் டிச.16 தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களின் பெயர்களை IPL டீம்களுக்கு Hint ஆக ரவிச்சந்திரன் அஸ்வின் கொடுத்து வருகிறார். அப்படி அவர் இன்று பதிவிட்ட போஸ்டில் சன்னிலியோன் + ஒரு தெரு(சந்து) போட்டோ இருந்தது. அந்த போட்டோவை வைத்து பார்க்கும் போது அவர் சொல்ல வந்த வீரரின் பெயர் தமிழகத்தை சேர்ந்த ஆல் ரவுண்டர் சன்னி சந்து என்பது தெரிய வருகிறது.

News December 9, 2025

‘பாசிச திமுக’ அரசின் முயற்சி முறியடிக்கப்படும்: நயினார்

image

நீதித்துறையை மிரட்ட முயலும் திமுக-காங்., கூட்டணி மக்களால் தோற்கடிக்கப்படும் என்று நயினார் தெரிவித்துள்ளார். தமிழர்களின் பண்பாட்டு உரிமையை நிலைநாட்டிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக பதவிநீக்க தீர்மானம் கொண்டுவர இண்டியா கூட்டணியின் MP-க்கள் முன்னெடுத்திருப்பது வெட்கக்கேடானது எனக் கூறிய அவர், வழிபாட்டு உரிமையை முடக்க நினைக்கும் பாசிச திமுக அரசின் முயற்சி முறியடிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

error: Content is protected !!