News January 8, 2025
வைகுண்ட ஏகாதசி விரதம்: எந்த நாளில் கண் விழிக்கணும்?

மார்கழி வளர்பிறையில் ஏகாதசி மோட்சம் தரும் என்பார்கள். 2025ம் வைகுண்ட ஏகாதசி ஆங்கில தேதிப்படி வரும் 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. ஆனால், பஞ்சாங்கத்தின் அடிப்படையில் ஏகாதசி நாளை மதியம் 12:03 மணிக்கே தொடங்குகிறது. சூரியன் உதிக்கும் போது என்ன திதி இருக்கிறதோ அதை தான் அன்று பின்பற்றுவார்கள். இதன் அடிப்படையில் நாளை இரவு கண் முழித்து நாளை மறுநாள் காலையில் சொர்க்கவாசல் பார்க்கவேண்டும். SHARE IT
Similar News
News September 14, 2025
பத்தே நிமிடங்களில் நிகழ்ந்த பேரதிர்ச்சி

உங்களுக்கு மெசேஜ் செய்த ஒருவர், அடுத்த 10-வது நிமிடத்தில் உயிருடனே இல்லை என்று சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்? இது நிஜ வாழ்விலும் நடந்துள்ளது. சரியாக காலை 8:37 மணிக்கு ஊழியர் லீவ் கேட்க, மேனேஜரும் அப்ரூவ் கொடுத்துள்ளார். சரியாக 8:47 மணிக்கு ஊழியர் மாரடைப்பால் இறந்துள்ளார் என்ற துயரச் செய்தியே வந்துள்ளது. ஆனால், அவருக்கு புகை பிடித்தல், மது குடித்தல் என்ற எந்த பழக்கமும் இல்லையாம். So Sad..
News September 14, 2025
BREAKING: நாடு முழுவதும் இந்த வங்கி சேவை முடங்கியது

HDFC வங்கி சேவைகள் முடங்கியுள்ளதால், வாடிக்கையாளர்கள் சோஷியல் மீடியாவில் புலம்பி வருகின்றனர். வங்கி சேவை மட்டுமின்றி, UPI பரிவர்த்தனையும் தடைப்பட்டுள்ளது. வார விடுமுறை நாளான இன்று, காலையிலேயே Server Down என்பதால், கடைகளுக்கு சென்ற பலரும் UPI-ல் பணம் செலுத்த முடியாமல் திண்டாடி வருகின்றனர். நாட்டின் பல இடங்களிலும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உங்களுக்கு வேலை செய்யுதா HDFC சேவைகள்?
News September 14, 2025
IND vs PAK: அர்ஷ்தீப் சிங் விளையாடுவாரா?

பும்ரா, அக்ஷர், வருண், குல்தீப் ஆகிய மெயின் பவுலர்கள், ஆசிய கோப்பைக்கான இந்திய அணியின் பிளேயிங் 11-ல் உள்ளனர். இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள பாக்.,க்கு எதிரான போட்டியில் அர்ஷ்தீப் சிங் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், ஏற்கெனவே உள்ள பிளேயிங் 11-ல் எந்த மாற்றமும் இல்லை என்று துணை கோச் ரயான் டென் டெஸ்கொத்தே கூறியுள்ளார். எனவே காயமடைந்துள்ள கில்லும் விளையாடுவார் என்பதும் உறுதியாகியுள்ளது.