News September 27, 2025
விஜய் பேச்சுக்கு வைகோ வரவேற்பு

1.37லட்சம் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என வைகோ தெரிவித்துள்ளார். அந்த மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கும் வகையில் ஐநா மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இலங்கை தமிழர்களுக்காக விஜய் உட்பட யார் குரல் கொடுத்தாலும், அதை மனதார வரவேற்பதாக சென்னையில் அளித்த பேட்டியில் வைகோ கூறியுள்ளார்.
Similar News
News January 15, 2026
நாகை மாவட்டத்தில் புகைப்பட போட்டி

பொங்கல் சார்ந்த புகைப்பட போட்டிக்கு அனைவரும் கலந்து கொள்ளலாம். பொங்கலின் பாரம்பரியம், கிராமத்து வாழ்க்கை, உழைப்பு, மகிழ்ச்சி இவற்றை மொபைல் அல்லது DSLR மிரர் லெஸில் புகைப்படமாக எடுக்க வேண்டும். அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜன.19 ஆகும். தேர்வு செய்யப்படும் புகைப்படங்கள் மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கங்களில் புகைப்படக் கலைஞரின் பெயருடன் வெளியிடப்படும் என நாகை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News January 15, 2026
குளிர்காலத்தில் வரும் முக்கிய பிரச்னை.. சரி செய்ய TIPS!

குளிர்காலத்தில் எளிதில் முடி வறண்டு, முடி உதிர்வு அதிகமாக ஏற்படும். இதனை தடுக்க 5 வழிகளை பின்பற்றினால் போதும். ➤தினமும் தலைக்கு குளிப்பதை தவிர்த்து, 3 நாளைக்கு ஒருமுறை தலைக்கு குளிக்கலாம் ➤Sulphate, Paraben free ஷாம்பு பயன்படுத்துங்கள் ➤கண்டிஷனரை பயன்படுத்துவது அவசியம் ➤முடியை பளபளப்பாக வைக்க சீரம் போடுங்கள் ➤இறுதியாக, தேவையான அளவு தண்ணீர் அருந்துவதும் அவசியம். SHARE.
News January 15, 2026
மக்கள் நாயகன் காலமானார்

சுற்றுச்சுழல் போராளி ஜி.ராஜ்குமார்(70) உடல்நலக்குறைவால் காலமானார். கேரளாவை சேர்ந்த இவர் TN-ன் கொடைக்கானல் முதல் கேரளாவின் மூணாறு வரை உள்ள காட்டுப்பகுதிகள் ஆக்கிரமிப்புக்கு எதிராக ‘Save Kurinji’ என்ற நடைபயணத்தை நடத்தினார். இதனால் மூணாறுக்கு அருகில் உள்ள 3,200 ஹெக்டேர் நிலப்பரப்பு குறிஞ்சி மலை, சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இவரது சேவையை மக்கள் மறந்தாலும் மலைகளும், காடுகளும் என்றும் நினைவில் கொள்ளும்.


