News September 27, 2025
விஜய் பேச்சுக்கு வைகோ வரவேற்பு

1.37லட்சம் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என வைகோ தெரிவித்துள்ளார். அந்த மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கும் வகையில் ஐநா மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இலங்கை தமிழர்களுக்காக விஜய் உட்பட யார் குரல் கொடுத்தாலும், அதை மனதார வரவேற்பதாக சென்னையில் அளித்த பேட்டியில் வைகோ கூறியுள்ளார்.
Similar News
News September 27, 2025
வரலாற்றில் இன்று

1825 – உலகின் முதலாவது பயணிகள் நீராவி ரயில் இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது.
1928 – ஐக்கிய அமெரிக்கா சீனக் குடியரசை அங்கீகரித்தது.
1933 – நகைச்சுவை நடிகர் நாகேஷ் பிறந்த தினம்.
1959 – ஜப்பானின், ஒன்சூ தீவில் ஏற்பட்ட சூறாவளியில் சிக்கி 5,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
1998 – கூகுள் தேடுபொறி தொடங்கப்பட்ட நாள்.
News September 27, 2025
நிலவுக்கு துருப்பிடித்துவிட்டதா? வியக்க வைக்கும் விஞ்ஞானிகள்

பூமியிலிருந்து உருவாகும் ஆக்ஸிஜன் துகள்களால் சந்திரன் துருப்பிடித்து வருவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஹெமாடைட் என்னும் இரும்பு ஆக்சைடின் படிவம் நிலவில் படித்துள்ளதையே துருப்பிடிப்பு என சொல்லப்படுகிறது. நிலவு எப்போதும் ஈரப்பதத்துடன் காணப்படுவதாக நீண்ட காலமாக கருதப்பட்டது. ஆனால் இப்போது அதில் துருப்பிடித்துள்ளது, ஆச்சரியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. நிலாவோட கலர் மாறுமா?
News September 27, 2025
உடற்பயிற்சிக்கு பின் வெந்நீரில் குளித்தால் சிக்கலா?

உடற்பயிற்சிக்கு பிறகு சூடான நீரில் குளித்தால் உடலில் கூடுதல் அழுத்தம் ஏற்படும். அது மட்டுமல்லாமல் உடற்பயிற்சி செய்யும்போது உடலானது சூடாகவும், இதயத்துடிப்பு அதிகமாகவும் இருக்கும். மேலும் இரத்த நாளங்களானது உடலை குளிர்விக்க அகலமாக விரிவடையும். இத்தகைய சூழ்நிலையில், சூடான நீரில் குளித்தால் உடலானது மேலும் சூடாகும். இதன் விளைவாக லேசான தலைச் சுற்றல் அல்லது மயக்கம் கூட வரலாம் என்கின்றனர் நிபுணர்கள்.