News April 29, 2025
வைபவ் சூர்யவன்ஷியின் வியக்க வைக்கும் சாதனைகள்!

14 வயதிலேயே சதமடித்துள்ள வைபவ் சூர்யவன்ஷி, ஐபிஎல் தொடரில் மேலும் பல அசைக்க முடியாத சாதனைகளையும் படைத்துள்ளார். அறிமுகமாகி குறைந்த போட்டிகளிலேயே (3) சதம் விளாசிய இந்திய வீரர் அவர்தான். நேற்றைய போட்டியில் அவர் அடித்த 101 ரன்களில் 93% சிக்சர், பவுண்டரி மூலம் குவித்துள்ளார். இது ஐபிஎல் தொடரில் எவரும் செய்யாத சாதனை. அதிவேக சதமடித்த இந்திய வீரரும் வைபவ் சூர்யவன்ஷிதான். 14 வயசுல இவ்வளவு சாதனைகளா..!
Similar News
News January 8, 2026
புயல்.. நாளை 7 மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு அலர்ட்

2026-ன் முதல் <<18802928>>புயல்<<>> வங்கக் கடலில் நாளை(ஜன.9) உருவாகக்கூடும் என IMD கணித்துள்ளது. இந்நிலையில், நாளை திருவாரூர், நாகையில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்காலில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், பள்ளி செல்லும் மாணவர்கள் குடை, ரெயின் கோர்ட் உள்ளிட்டவற்றை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள். BE CAREFUL
News January 8, 2026
சென்சார் விவகாரம்.. விஜய் மௌனியாக இருப்பது ஏன்?

சென்சார் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஜனநாயகனே (விஜய்) வாய்மூடி மௌனியாக இருப்பதாக CPM பெ.சண்முகம் விமர்சித்துள்ளார். சென்சார் போர்டை குறை சொன்னால் மத்திய அரசை குறை சொன்னதாக ஆகி விடுமோ என்ற அச்சத்தில் படம் வெளியாவது தள்ளி போனாலும் பரவாயில்லை; தன்னை பாதுகாத்துக் கொண்டால் போதும் என எதுவும் சொல்லாமல் இருக்கிறார்; அப்படி இருக்கையில் மற்றவர்கள் எல்லாம் பதறி என்ன ஆகப்போகிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.
News January 8, 2026
BREAKING: மீண்டும் புயல்.. நாளை பேய் மழை வெளுக்கும்

வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுவடையும் என IMD தெரிவித்துள்ளது. 15 கிமீ வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் இந்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் உருவானால் 2026-ன் முதல் புயலாக இது இருக்கும். இதன் தாக்கத்தால் இன்று நள்ளிரவில் மழையும், நாளை கனமழையும் பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


