News March 30, 2025
வி.கே.பாண்டியன் மனைவிக்கு விருப்ப ஓய்வு

ஒடிஷா முன்னாள் CM நவீன் பட்நாயக்கிற்கு நெருக்கமான வி.கே.பாண்டியனின் மனைவியும், IAS அதிகாரியுமான சுஜாதாவின் விருப்ப ஓய்வை மத்திய அரசு ஏற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒடிஷாவில் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் பாண்டியன் குடும்பத்திற்கு நெருக்கடி ஏற்பட்டது. அதையடுத்து, 6 மாத காலம் சுஜாதா விடுப்பில் சென்றார். பின், மேலும் விடுப்பை நீட்டிக்க கோரிய நிலையில், அது நிராகரிக்கப்பட்டதால், VRS கோரினார்.
Similar News
News January 17, 2026
மத்திய அரசுக்கு இறுதி வாய்ப்பு: SC அதிரடி!

அனைவருக்கும் கல்வி திட்டத்தில் TN-க்கு வழங்க வேண்டிய ₹3,500 கோடி நிதியை விடுவிக்க கோரி, TN அரசு SC-ல் வழக்கு தொடர்ந்திருந்தது. இதன் வழக்கு விசாரணையின்போது, மத்திய அரசின் நடவடிக்கையால் 45 லட்சம் மாணவர்கள், 2 லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக TN அரசு தரப்பில் வாதம் செய்யப்பட்டது. இதையடுத்து, வழக்கில் 4 வாரத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய இறுதி வாய்ப்பு வழங்கி SC உத்தரவிட்டுள்ளது.
News January 17, 2026
திமுகவில் இணைந்தார்.. ஓபிஎஸ் அதிர்ச்சி

டெல்டா மாவட்டங்களில் அதிமுகவின் முக்கிய முகங்களில் ஒருவராக வலம்வந்த வேதாரண்யம் PKV பிரபு, உதயநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இவரது தாத்தா வெங்கடாசலம் காங்கிரஸில் EX MLA, மாநில து.தலைவராக இருந்தவர். திமுகவில் இணைந்த பிரபு, அதிமுக(OPS அணி) மாநில அமைப்புச் செயலாளராக இருந்தவர். மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ் என அடுத்தடுத்து தனது ஆதரவாளர்கள் திமுகவில் இணைவது OPS-க்கு அதிர்ச்சி தந்துள்ளது.
News January 17, 2026
₹565 கட்டினால் போதும் ₹10 லட்சத்துக்கான காப்பீடு!

போஸ்ட் ஆபீசின் காப்பீட்டு திட்டத்தில் ஆண்டுக்கு ₹565 பிரீமியமாக செலுத்தினால், ₹10 லட்சம் வரை காப்பீட்டுத் தொகையைப் பெறலாம். இந்த காப்பீடு திட்டத்தில் சேர மருத்துவ சான்றிதழ் தேவையில்லை. 18 முதல் 65 வயதுக்குட்பட்டவர்கள் யாராக இருந்தாலும் இந்தத் திட்டத்தில் சேரலாம். இயற்கை (அ) விபத்தில் மரணமடைந்தால் நாமினி பணத்தை பெறலாம். விருப்பமுள்ளவர்கள் Post Office-ஐ அணுகுங்கள். அனைவரும் பயன்பெற SHARE பண்ணுங்க.


