News June 15, 2024
உத்தராகண்ட் விபத்து: பிரதமர், ஜனாதிபதி இரங்கல்

உத்தராகண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த விபத்தில், ஆன்மிகப் பயணம் சென்ற 12 பக்தர்கள் உயிரிழந்ததை அறிந்து மன வேதனை அடைந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ₹50,000 வழங்கவும் அவர், உத்தரவிட்டுள்ளார். இதேபோல, 12 பேர் உயிரிழந்ததற்கு ஜனாதிபதி திரெளபதி முர்முவும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 2, 2026
அரியலூர்: பரப்புரையில் ஈடுபட்ட திமுகவினர்

அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில், தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தலைமையில், திமுகவினர் வீடு வீடாக சென்று பரப்புரையில் ஈடுபட்டனர். திமுக அரசின் சாதனைகளையும் செயல் திட்டங்களையும் பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் வண்ணமாக, வீடு வீடாக சென்று பரப்புரையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
News March 2, 2026
CINEMA 360°: பழைய டெக்னிக்கை தூசி தட்டும் KHxRK

டிஜிட்டல் கேமராவை பயன்படுத்தாமல், ஃபிலிம் பார்மெட்டில் KHxRK படத்தை ஷூட் செய்யவுள்ளார்களாம் *அஸ்வத் மாரிமுத்து இயக்கும் சிம்பு 51-வது படத்தில் சந்தானம் நடிக்கவுள்ளாராம் *கத்தாரில் இருந்து கடைசி புறப்பட்ட கடைசி விமானத்தின் மூலம் USA-விற்கு தப்பித்து விட்டதாக சந்தோஷ் நாராயணன் பதிவிட்டுள்ளார் *இன்று மதியம் 12:59 மணிக்கு ‘டாக்ஸிக்’ படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளது
News March 2, 2026
பெட்ரோல், டீசல் விலை உயர்கிறதா? CHECK

ஈரான் – US போர் எதிரொலியால் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஒரு பீப்பாய் பிரெண்ட் கச்சா எண்ணெய் $80 வரை உயர்ந்துள்ளது. மேலும் போர் பதற்றம் தணியாத வரை, வரும் நாள்களில் $100 வரை உயரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் இந்திய சந்தையில் வெகு நாள்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.


