News July 4, 2024

தம்பதியர் ஒற்றுமை காக்கும் உத்திரகோசமங்கை கோயில்

image

‘வலை வீசி மீன் பிடித்த படலம்’ என்ற திருவிளையாடலை ஈசன் நடத்திய திருத்தலம் ராமநாதபுரம் உத்திரகோசமங்கை கோயிலாகும். தமிழ் மன்னன் ராவணன், மண்டோதரி திருமணம் நடந்ததாக மயன் புராணம் கூறும் பெருமை பெற்றது. இக்கோயிலுக்கு விரதமிருந்து சென்று மங்களநாதர் – மங்களநாயகிக்கு சந்தன அபிஷேகம் செய்து, நெய் தீபமேற்றி, ரோஜா மாலை சாற்றி வணங்கினால் கணவன் மனைவி இடையேயான ஒற்றுமை பலப்படும் என்பது ஐதீகம்.

Similar News

News November 27, 2025

BREAKING: அதிமுகவில் இருந்து நீக்கம்.. இபிஎஸ் அடுத்த அதிரடி

image

சேலம் ஆத்தூர் அருகே அதிமுக ஜெயலலிதா பேரவை மாவட்டச் இணைச் செயலாளரான சங்கர், தூய்மைப் பணியாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கைது செய்யப்பட்டார். இது அரசியல் ரீதியாக பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்நிலையில், கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சங்கர் நீக்கப்படுவதாக EPS அறிவித்துள்ளார்.

News November 27, 2025

தித்வா புயல்: பெயருக்கு இதுதான் அர்த்தமா..!

image

வங்க கடலில் உருவாக உள்ள புயலுக்கு ஏமன் நாடு பரிந்துரைத்த ‘தித்வா’ என்ற பெயர் சூட்டப்பட உள்ளது. “Detwah Lagoon” என்பது யேமனின் Socotra தீவில் உள்ள குளத்தை குறிக்கிறது. அடுத்த 12 மணிநேரத்தில் புயலாக மாறவிருக்கும் இது, வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா பகுதிகளை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறதாம். இதனால் சென்னை உள்பட வட தமிழகத்தில் கனமழை பெய்யும் என IMD எச்சரித்துள்ளது.

News November 27, 2025

இளையராஜா எப்படி பாதிக்கப்படுகிறார்? HC

image

‘Dude’ படத்தில் அனுமதியின்றி பயன்படுத்திய தனது பாடலை நீக்க கோரி இளையராஜா, சென்னை HC-ல் மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையில், 30 வருடங்களுக்கு முன்பு வெளியான பாடல்களை கேட்டு ரசிப்பதால் இளையராஜா எவ்வாறு பாதிக்கப்படுகிறார் என HC கேள்வி எழுப்பியது. பாடலுக்கான உரிமை எங்களிடம் உள்ளதாக இளையராஜா தரப்பில் வாதிடப்பட்டது. பின்னர், இம்மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் HC ஒத்திவைத்தது.

error: Content is protected !!