News March 16, 2024
தேர்தல் குறித்த அவசர ஆலோசனை

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சங்கீதா தலைமையில் இன்று தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கான அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதை உறுதி செய்ய மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
Similar News
News December 4, 2025
மதுரையில் கம்மி விலையில் சொந்த வீடு வேணுமா?

ஒரு சொந்த வீடு என்பது ஒரு குடும்பத்தின் ஆயுள் கனவு. அதன் விலை எட்டாத உயரத்தில் உள்ளதால் பலருக்கும் அது எட்டாத கனவாக உள்ளது. இதை மாற்ற ஒரு வழி உள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக மதுரையில் 1000-த்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதை அரசு மானிய விலையில் வழங்குகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம், சொத்து இல்லாதவர்கள் இங்கே <
News December 4, 2025
அலங்காநல்லூர் அருகே எலக்ட்ரீசியன் தற்கொலை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வலசை கிராமத்தைச் சேர்ந்த விஜய் பிரபாகரன் 26. எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வினோதா இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக மன வேதனை அடைந்த அவர் நேற்று மாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
News December 4, 2025
மதுரைக்கு வரும் தமிழக முதல்வர்

மதுரையில் 7ம் தேதி பிரம்மாண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் 6ம் தேதி மாலை மதுரை வருகிறார். அவருக்கு விமான நிலையத்தில் மதுரை வடக்கு, மாநகர், தெற்கு திமுக சார்பில் எழுச்சிமிகு வரவேற்பு கொடுக்கப்பட உள்ளதாகவும், அதில் திமுகவின் திரளாக பங்கேற்க வேண்டும் என அறிக்கையில் செயலர்கள்: அமைச்சர் மூர்த்தி மாநகர் செயலர் தளபதி எம்எல்ஏ தெற்கு செயலர் மணிமாறன் தெரிவித்துள்ளனர்.


