News April 21, 2025
உறையூர் உயிரிழப்பு: கே.என்.நேரு மறுப்பு

திருச்சி உறையூரில் கழிவுநீர் கலந்த குடிநீர் அருந்தி 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படுவது ஆதாரமற்றது என அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். பேரவையில் இபிஎஸ் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதில் அளித்த அவர், உறையூர் வெக்காளி அம்மன் கோயில் திருவிழாவில் வழங்கிய சுகாதாரமற்ற குளிர்பானத்தை குடித்ததால் தான் பலருக்கு வயிற்று கோளாறு ஏற்பட்டதாகவும், குடிநீரில், கழிவுநீர் கலக்கவில்லை என்றும் கூறினார்.
Similar News
News October 22, 2025
DUDE படம் பார்க்க பார்க்க பிடிக்கும்: பிரதீப்

ஹீரோவாக நடித்த 3 படங்களும் ஹிட் அடிக்க, தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமாக முன்னேறியுள்ளார் பிரதீப் ரங்கநாதன். வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் அவரது ‘DUDE’ படம் குறித்து பேசிய அவர், சிலருக்கு இப்படத்தில் மாற்றுக் கருத்து இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். பார்க்க பார்க்க இப்படம் பிடிக்கும், இது ஒரு REWATCHABLE படமாக இருக்கும் எனவும் பிரதீப் கூறியுள்ளார்.
News October 22, 2025
26 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்

சென்னை, செங்கை, காஞ்சி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், விழுப்புரம், கோவை, தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, குமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, புதுக்கோட்டை, சேலம், தென்காசி, தஞ்சை, தேனி, நீலகிரி, தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, திருப்பத்தூர், தி.மலை, விருதுநகரில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதனால், பள்ளி மாணவர்கள், பணி முடிந்து வீடு திரும்புவோர் கவனமாய் இருங்கள்.
News October 22, 2025
நெல் கொள்முதல்: EPSக்கு அமைச்சர் பதிலடி

EPS ஆட்சியில் தினசரி 700 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது அது 1,000 மூட்டைகளாக உயர்ந்துள்ளதாக அமைச்சர் MRK பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் நெல் மூட்டைகள் திறந்தவெளியில் வைக்கப்பட்டு, நெல் மணிகள் நாற்று நடும் அளவிற்கு வளர்ந்த சம்பவங்கள் உண்டு என்றும் <<18072011>>EPS<<>>-க்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார். முன்னதாக, நெல் கொள்முதலை அரசு தாமதிப்பதாக EPS விமர்சித்திருந்தார்.