News August 25, 2024
அரசு ஊழியர் நிதி பாதுகாப்பை UPS உறுதி செய்யும்: மோடி

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (UPS), அரசு ஊழியர்களின் நிதி பாதுகாப்பை உறுதி செய்யும் என PM மோடி கூறியுள்ளார். தேச வளர்ச்சிக்காக உழைப்பவர்களை எண்ணி பெருமையடைவதாக Xல் குறிப்பிட்டுள்ள அவர், ஊழியர்களின் கண்ணியம், பாதுகாப்பை UPS உறுதி செய்கிறது எனத் தெரிவித்துள்ளார். மேலும், அரசு ஊழியர்களின் நலன், எதிர்காலம் தொடர்பான மத்திய அரசின் உறுதியான நிலைப்பாட்டை இது பிரதிபலிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News August 14, 2025
ஸ்டாலின் தொகுதியில் 9,000 போலி வாக்குகள்: பாஜக

BJP அரசு, ECI உடன் இணைந்து வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக காங்., திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இந்நிலையில், 2021 தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் 19,476 வாக்குகள் சந்தேகத்திற்கு இடமானவை என அனுராக் சிங் தாக்குர் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவற்றில் 9,133 வாக்குகள் போலி வாக்குகள் என்றும், ஒரே முகவரியில் 30 வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News August 14, 2025
உயராத தங்கம் விலை

கடந்த மூன்று நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்த நிலையில், இன்று விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹74,320-க்கும், கிராமுக்கு ₹9,290-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து விலை குறைந்ததால், இன்று உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பதால், நகை பிரியர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
News August 14, 2025
இரவில் கைது.. கொந்தளித்த விஜய்

அறவழியில் போராடிய தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில், திமுக அரசு இரவோடு இரவாகக் கைது செய்துள்ளதாக விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். நள்ளிரவில் நடைபெற்ற இந்தக் கைது நடவடிக்கையை மனசாட்சியுள்ள எவராலும் தாங்கிக்கொள்ள முடியாது. இது கொடுங்கோல் ஆட்சியின் வெளிப்பாடு என சாடிய அவர், கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.