News August 25, 2024
அரசு ஊழியர் நிதி பாதுகாப்பை UPS உறுதி செய்யும்: மோடி

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (UPS), அரசு ஊழியர்களின் நிதி பாதுகாப்பை உறுதி செய்யும் என PM மோடி கூறியுள்ளார். தேச வளர்ச்சிக்காக உழைப்பவர்களை எண்ணி பெருமையடைவதாக Xல் குறிப்பிட்டுள்ள அவர், ஊழியர்களின் கண்ணியம், பாதுகாப்பை UPS உறுதி செய்கிறது எனத் தெரிவித்துள்ளார். மேலும், அரசு ஊழியர்களின் நலன், எதிர்காலம் தொடர்பான மத்திய அரசின் உறுதியான நிலைப்பாட்டை இது பிரதிபலிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News March 7, 2026
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: நீதிபதி கேள்வி!

கோத்தகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட் பங்களாவில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை தொடர்பான வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றைய விசாரணையின் போது, இந்த வழக்கு இன்னும் முடிக்கப்படாமல் நிலுவையில் இருப்பது ஏன் என நீதிபதி முரளிதரன் கேள்வி எழுப்பினார். இதனையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஏப்ரல் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
News March 7, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 7) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News March 7, 2026
மழையால் போட்டி ரத்தானால் கோப்பை யாருக்கு?

WC-ல் இறுதி போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை பலப்பரீட்சை நடத்த உள்ளன. ஆனால், மழையோ அல்லது வேறு காரணத்திற்காகவோ போட்டி பாதியில் தடைபட்டால் கோப்பை யாருக்கு என்ற கேள்வி பலருக்கு இருக்கலாம். அப்படி போட்டி ரத்தானால் மீண்டும் திங்கட்கிழமைக்கு விட்ட இடத்தில் இருந்து மீண்டும் போட்டி தொடங்கும். அன்றைய தினமும் போட்டி பாதிக்கப்பட்ட இரு அணிகளும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவர்.


