News October 17, 2024
ரயிலில் குழந்தை மீது விழுந்த UPPER BERTH!

ரயிலில் குழந்தைக்கு நேர்ந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை – நாகர்கோவில் இடையே இயக்கப்பட்ட விரைவு ரயிலில், S7 பெட்டியில் ஒரு குடும்பம் பயணித்தது. அப்போது, கீழ் படுக்கையில் (Lower Berth) தங்களின் 4 வயது குழந்தையை பெற்றோர் படுக்க வைத்தனர். இரவு அனைவரும் தூங்கிய நிலையில், அக்குழந்தை மீது UPPER BERTH சீட் அறுந்து விழுந்தது. இதில் படுகாயமடைந்த குழந்தை, ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 2, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.2) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News September 2, 2025
ஆகஸ்ட்டில் ₹1.86 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்

ஆகஸ்ட் மாதத்தில் ₹1.86 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகி இருப்பதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. இது 2024-ம் ஆண்டு ஆகஸ்ட்டை விட(₹1.75 லட்சம் கோடி) 6% அதிகமாகும். தமிழகத்தை கணக்கிட்டால் கடந்த ஆண்டை விட 9% அதிகம் வசூலாகியுள்ளது. ஜிஎஸ்டி வருவாயில் மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழகம், குஜராத் ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் இருக்கின்றன. தீபாவளியன்று ஜிஎஸ்டி குறைக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
News September 2, 2025
தினமும் லேட்டாக தூங்குபவரா நீங்கள்?

தினமும் இரவில் யூடியூப், வெப்சீரிஸ், ரீல்ஸ் எல்லாம் பார்த்துவிட்டு லேட்டாக தூங்குபவரா நீங்கள்? இத கவனிங்க. நள்ளிரவு 1 மணிக்கு மேல் தூங்கச் செல்பவர்களுக்கு மனநலப் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு 20-40% அதிகம் என்கிறது ஸ்டான்போர்ட் பல்கலை., ஆய்வு. நீங்கள் எவ்வளவு நேரம் தூங்குகிறீர்கள் என்பதைவிட, எத்தனை மணிக்கு தூங்கப் போகிறீர்கள் என்பதே உங்கள் மனநலத்தை தீர்மானிக்கிறதாம். ஆகவே, நேரத்துக்கு தூங்குங்க.