News March 14, 2025

18ம் படி ஏறியதும் பகவான் தரிசனம்! இன்று முதல் அமல்

image

சபரிமலையில் பங்குனி மாத பூஜைக்காக கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. தொடர்ந்து நாளை முதல் வரும் 19 ஆம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும். இம்மாதம் முதல் தரிசனத்தில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, 18ஆம் படியேறியதும் கொடிமரம் வழியாக சென்று நேரடியாக ஐயப்பனை தரிசிக்கலாம். இதன் மூலம் பக்தர்களுக்கு ஐயப்பனை தரிசிப்பதற்கான நேரம் கூடுதலாக கிடைக்கும்.

Similar News

News March 14, 2025

எப்போதும் உன்னுடன் இருப்பேன் – KL ராகுல்

image

IPL தொடரில் டெல்லி கேப்டன் யார் என்ற கேள்விக்கு இன்று விடை கிடைத்துள்ளது. அக்சர் படேலை கேப்டனாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், அக்சர் படேலுக்கு, KL ராகுல் வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘வாழ்த்துகள் பப்பு. புதிய பயணம் சிறப்பாக அமைய எப்போதும் உன்னுடன் இருப்பேன்’ என அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, கேப்டன் பதவியில் தனக்கு விருப்பமில்லை என KL ராகுல் கூறியதாக தகவல் வெளியாகி இருந்தது.

News March 14, 2025

‘டாஸ்மாக்கில் எந்த ஊழலும் நடைபெறவில்லை’

image

டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு முறைகேடு நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். டாஸ்மாக் டெண்டரில் எந்த ஊழலும், முறைகேடும் நடைபெறவில்லை. தமிழக அரசுக்கு எதிராக ED-ஐ மத்திய அரசு உள்நோக்கத்துடன் ஏவியுள்ளது. எந்தக் குற்றச்சாட்டையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் என செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

News March 14, 2025

TN Budget: அரசு ஊழியர்களுக்கு 5 முத்தான அறிவிப்புகள்

image

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட <<15757548>>EL விடுப்பு பணம்<<>> பெறுதல் முறை வரும் 1 முதல் அமலுக்கு வருகிறது. *சென்னையில் ₹110 கோடியில் அரசு ஊழியர்களுக்கு வாடகை குடியிருப்பு. *அரசு ஊழியர்களுக்கு வங்கிகள் மூலம் ₹1 கோடி விபத்து காப்பீடு.*அரசு அலுவலரின் பெண் பிள்ளைகளின் திருமணச் செலவுகளுக்காக ₹5 லட்சம் வங்கி நிதியுதவி.*பணிக் காலத்தில் எதிர்பாராமல் மரணமடைந்தால் ஆயுள் காப்பீடாக ₹10 லட்சம் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!