News January 1, 2025

UPI123Pay பணம் அனுப்பும் வரம்பு 2 மடங்கு அதிகரிப்பு

image

FEATURE போன் வாடிக்கையாளர்களுக்கு உருவாக்கப்பட்டது UPI123Pay செயலி. இதன் மூலம் மற்ற UPI பயனாளர்களுக்கு தினமும் ரூ.5,000 மட்டுமே இதுவரை அனுப்ப முடிந்தது. அதை ரிசர்வ் வங்கி அண்மையில் 2 மடங்கு அதிகரித்தது. அதன்படி, இன்று முதல் ஒருநாளைக்கு ரூ.10,000 வரை அனுப்பலாம். அதேநேரத்தில், மற்ற UPI செயலிகளான GPAY, Paytm, PHONE PE உள்ளிட்டவற்றுக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை. ரூ.1 லட்சம் வரை அனுப்பலாம்.

Similar News

News December 8, 2025

இரவிலும் உறங்காமல் உழைக்கிறேன்: மு.க.ஸ்டாலின்

image

எத்தனை எதிரிகள் வந்தாலும் TN-ஐ மீண்டும் ஆளப்போவது உதயசூரியன்தான் என ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக மா.செ.க்கள், நகரம், ஒன்றியம், பேரூர் நிர்வாகிகளிடம் பேசிய அவர், இந்த ஆட்சியின் சிறப்பான பணிகளை பார்த்து நடுநிலை வாக்காளர்களும் ஆதரவாக நிற்பதாக தெரிவித்துள்ளார். மேலும், தான் இரவிலும் உறங்காமல் உழைப்பதாகவும், அதேபோல அனைவரும் அப்படி உழைக்க வேண்டும் எனவும் திமுகவினருக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

News December 8, 2025

இந்திய அணிக்கு 10% அபராதம் விதித்த ICC

image

தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான ODI தொடரை இந்திய அணி கைப்பற்றியிருந்தது. இதில் 2-வது போட்டியில் இந்திய அணி பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதால், ICC அபராதம் விதித்துள்ளது. போட்டி கட்டணத்தில் இருந்து 10% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. SA இடையேயான டி20 தொடர் நாளை கட்டாக்கில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

News December 8, 2025

சபரிமலையில் 10 பேர் உயிரிழப்பு.. தொடரும் சோகம்

image

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவ.16-ல் நடை திறக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் சபரிமலை கோயிலுக்கு சென்று வருகின்றனர். முதல் 10 நாள்களில், கோவை பக்தர் முரளி உள்பட 9 பேர் உடல்நலக் குறைவால் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில், இன்று கடலூர் பக்தர் சுந்தர்(66), மாரடைப்பால் இறந்துள்ளார். பாதுகாப்பாக இருங்கள் பக்தர்களே!

error: Content is protected !!