News January 1, 2025
UPI123Pay பணம் அனுப்பும் வரம்பு 2 மடங்கு அதிகரிப்பு

FEATURE போன் வாடிக்கையாளர்களுக்கு உருவாக்கப்பட்டது UPI123Pay செயலி. இதன் மூலம் மற்ற UPI பயனாளர்களுக்கு தினமும் ரூ.5,000 மட்டுமே இதுவரை அனுப்ப முடிந்தது. அதை ரிசர்வ் வங்கி அண்மையில் 2 மடங்கு அதிகரித்தது. அதன்படி, இன்று முதல் ஒருநாளைக்கு ரூ.10,000 வரை அனுப்பலாம். அதேநேரத்தில், மற்ற UPI செயலிகளான GPAY, Paytm, PHONE PE உள்ளிட்டவற்றுக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை. ரூ.1 லட்சம் வரை அனுப்பலாம்.
Similar News
News December 3, 2025
சென்னை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (டிச.3) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 3, 2025
BREAKING: இந்திய அணி அதிர்ச்சி தோல்வி

2-வது ODI-ல் 359 ரன்கள் என்ற இமாலய இலக்கை சேஸ் செய்து தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி பெற்றது. ஏய்டன் மார்க்ரம்(110) சதம் அடித்து அந்த அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தார். தொடர்ந்து பிரீட்ஷி(68) மற்றும் டிவால்ட் பிரேவிஸ்(54) அதிரடியாக விளையாட, கடைசி ஓவரில் SA வெற்றியை தனதாக்கியது. இருவர் சதம் அடித்தும் பந்து வீச்சு எடுபடாததால் இந்தியா தோல்வியை தழுவியது.
News December 3, 2025
நாளை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர்கள் அறிவிப்பு

தமிழகத்திற்கு ரெட், ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிச.4) விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், வட & டெல்டா மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மழையை பொறுத்து அங்கும் விடுமுறை அளிக்கப்படலாம்.


