News March 2, 2025
ரூ.23.48 லட்சம் கோடி UPI பரிவர்த்தனை

கடந்த ஜனவரி மாதத்தில் நாட்டு மக்கள், ஜிபே, போன் பே உள்ளிட்ட UPI வசதிகள் மூலம் மேற்கொண்ட பணப்பரிவர்த்தனை விவரம் வெளிவந்துள்ளது. அதில், ஜனவரி மாதத்தில் மட்டும் நாட்டு மக்கள் ரூ.23.48 லட்சம் கோடிக்கு பரிவர்த்தனை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. 16.99 பில்லியன் எண்ணிக்கை பரிவர்த்தனை நடந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. UPI பரிவர்த்தனையில் இது பெரிய சாதனை எனப்படுகிறது. நீங்கள் UPI பயன்படுத்துறீங்களா?
Similar News
News April 3, 2026
திருவாரூர்: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

திருவாரூர் மக்களே, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் கையெழுத்திட்ட 60 நாட்களுக்குள் கட்டாயம் ஆன்லைனில் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட வேண்டும். இதை செய்ய தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இதுபோல வீட்டின் உரிமையாளர்கள் 2 மாத வாடகைக்கு மேல் அட்வான்ஸ் தொகை பெறக்கூடாது. ஷேர் பண்ணுங்க!
News April 3, 2026
4 தொகுதிகளில் பாஜகவுடன் மோதும் காங்.,

தொகுதிகளில் 4 தொகுதிகளில் காங் – பாஜக இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. விளவங்கோடு – பாஜகவின் விஜயதரணியை எதிர்த்து காங்.,சின் டி.டி.பிரவீன், உதகை – பாஜகவின் போஜராஜனை எதிர்த்து காங்., வேட்பாளர் ராமச்சந்திரன், அறந்தாங்கி – பாஜகவின் கவிதா ஸ்ரீகாந்தை எதிர்த்து காங்.,சின் டி.ராமச்சந்திரன், குளச்சல் – காங்கிரஸின் தாரகை கத்பர்ட்டை எதிர்த்து பாஜகவின் டி.சிவகுமார் போட்டியிடுகின்றனர். <<-se>>#TNElection2026<<>>
News April 3, 2026
பெண்ணின் பிறப்புறுப்பில் இரும்பு கம்பியால்.. கொடூரம்

பெண்ணை பலாத்காரம் செய்து பிறப்புறுப்பில் இரும்பு கம்பியால் தாக்கிய கொடுமை ஆந்திராவில் நடந்துள்ளது. அரசு ஊழியரான அப்பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர், கத்தி முனையில் மிரட்டி அப்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் தனக்கு HIV தொற்று இருப்பதாக கூறியதால் ஆத்திரமடைந்த அந்த கொடூரன், அப்பெண்ணின் பிறப்பிறுப்பில் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இந்த மனித மிருகத்தை என்ன செய்வது?


