News April 1, 2025

உச்சத்தை தொட்ட யுபிஐ பரிவர்த்தனை

image

நாட்டில் பெரும்பாலானோர் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், யுபிஐ மூலம் மார்ச் மாதத்தில் ₹24.77 லட்சம் கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டதாக NPCI தெரிவித்துள்ளது. இது இதுவரையில் இல்லாத உச்சம் ஆகும். சராசரி பரிவர்த்தனை மதிப்பும் ஒரு நாளைக்கு ₹79,903 கோடியாக உயர்ந்துள்ளது, இது பிப்ரவரி மாதத்தை விட 1.9% அதிகமாகும். பரிவர்த்தனை மதிப்பு அடிப்படையில் 25% அதிகரித்துள்ளது.

Similar News

News August 27, 2025

மேற்கு வங்க மக்கள் திருடர்களா? மம்தா பதிலடி

image

மாநில முதல்வருக்கு மரியாதை கொடுக்காமல், மேற்கு வங்க மக்கள் அனைவரும் திருடர்கள் என்பது போல் PM மோடி பேசியுள்ளதாக CM மம்தா குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசின் நிதியை TMC விழுங்கிவிடுவதாக மோடி விமர்சித்த நிலையில், PM இவ்வாறு பேசுவார் என எதிர்பார்க்கவில்லை என மம்தா கூறியுள்ளார். மத்திய அரசு உரிய நிதியை மாநிலத்துக்கு வழங்காமல் திருட்டுக் குற்றச்சாட்டை சுமத்துவதாகவும் சாடியுள்ளார்.

News August 27, 2025

புஜாராவின் ஆட்டத்தை சிலாகித்த விராட் கோலி

image

இந்திய டெஸ்ட் அணியில் நட்சத்திர வீரராக திகழ்ந்த புஜாரா சமீபத்தில் தனது ஓய்வை அறிவித்தார். இந்நிலையில், புஜாராவிற்கு தனது நன்றியை விராட் கோலி தனது சோஷியல் மீடியாவில் தெரிவித்துள்ளார். அதில் நான்காவது இடத்துக்கான எனது வேலையை எளிதாக்கியதற்கு நன்றி என்றும் உங்களது கிரிக்கெட் பயணம் அருமையாக இருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார். உங்களது அடுத்தகட்ட நகர்வுகளுக்கு வாழ்த்துகள் எனவும் கூறியுள்ளார்.

News August 27, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: குற்றங்கடிதல் ▶குறள் எண்: 440 ▶குறள்:
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.
▶ பொருள்: தமது விருப்பத்தைப் பகைவர் அறிந்து கொள்ள முடியாமல் நிறைவேற்றுபவரிடம் அந்தப் பகைவரின் எண்ணம் பலிக்காமல் போய்விடும்.

error: Content is protected !!