News April 1, 2025
உச்சத்தை தொட்ட யுபிஐ பரிவர்த்தனை

நாட்டில் பெரும்பாலானோர் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், யுபிஐ மூலம் மார்ச் மாதத்தில் ₹24.77 லட்சம் கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டதாக NPCI தெரிவித்துள்ளது. இது இதுவரையில் இல்லாத உச்சம் ஆகும். சராசரி பரிவர்த்தனை மதிப்பும் ஒரு நாளைக்கு ₹79,903 கோடியாக உயர்ந்துள்ளது, இது பிப்ரவரி மாதத்தை விட 1.9% அதிகமாகும். பரிவர்த்தனை மதிப்பு அடிப்படையில் 25% அதிகரித்துள்ளது.
Similar News
News November 10, 2025
உண்மையான அட்டைக் கத்தி உதயநிதி: லயோலா மணி

என்ன போராட்டம், என்ன தியாகம் செய்துள்ளீர்கள்? எதற்கு உங்களுக்கு திமுக இளைஞரணி பதவி என DCM <<18244386>>உதயநிதிக்கு<<>> தவெக கொள்கை பரப்பு இணைச்செயலாளர் லயோலா மணி கேள்வி எழுப்பியுள்ளார். உண்மையான அட்டை கத்தி உதயநிதிதான் என்ற அவர், போய் அடுத்த படத்திற்கு ரிவ்யூ கொடுங்கள் என விமர்சித்துள்ளார். மேலும், எமர்ஜென்சியை பார்த்த திமுக, கடைசியில் அதை கொண்டு வந்த இந்திரா காந்தியிடம் அடிமையாக கிடந்தது என்றும் கூறியுள்ளார்.
News November 10, 2025
BREAKING: தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்

தங்கம் விலை இன்று(நவ.10) சவரனுக்கு ₹880 அதிகரித்துள்ளது. 22 கேரட் 1 கிராமுக்கு ₹110 உயர்ந்து ₹11,410-க்கும், சவரன் ₹91,280-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஏறுமுகத்தை கண்டுள்ளதால், நம்மூர் சந்தையிலும் தங்கம் விலை பெரிய மாற்றத்தை கண்டுள்ளது.
News November 10, 2025
ஜார்க்கண்டில் I.N.D.I.A கூட்டணி உடைகிறதா?

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆர்ஜேடி தலைமையில் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி அமைந்தது. இதில் ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியும்( ஜேஎம்எம்) இடம் பெற்றது. ஆனால், அக்கட்சிக்கு 2 தொகுதிகள் கூட ஒதுக்கவில்லை. இதனால், அதிருப்தியடைந்த அக்கட்சியின் மூத்த தலைவர் சுதிப்ய குமார், இதற்கு சரியான பதிலடியாக ஜார்க்கண்டில் ஆர்ஜேடி, காங்., உடனான கூட்டணியை மறுபரிசீலனை செய்வோம் என கூறியுள்ளார்.


