News April 1, 2025
உச்சத்தை தொட்ட யுபிஐ பரிவர்த்தனை

நாட்டில் பெரும்பாலானோர் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், யுபிஐ மூலம் மார்ச் மாதத்தில் ₹24.77 லட்சம் கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டதாக NPCI தெரிவித்துள்ளது. இது இதுவரையில் இல்லாத உச்சம் ஆகும். சராசரி பரிவர்த்தனை மதிப்பும் ஒரு நாளைக்கு ₹79,903 கோடியாக உயர்ந்துள்ளது, இது பிப்ரவரி மாதத்தை விட 1.9% அதிகமாகும். பரிவர்த்தனை மதிப்பு அடிப்படையில் 25% அதிகரித்துள்ளது.
Similar News
News November 14, 2025
கவின் கொலை வழக்கு: சுர்ஜித் தாய்க்கு பிடிவாரண்ட்

நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித்தின் தாய் கிருஷ்ணகுமாரியை கைது செய்ய மாவட்ட கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான கிருஷ்ணகுமாரி, கோர்ட் விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து காலதாமதம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் ஏற்கெனவே சுர்ஜித், அவரது தந்தை மற்றும் உறவினர் சரவணன் ஆகியோர் சிறையில் உள்ளனர்.
News November 14, 2025
வி.சேகர் இயக்கிய திரைப்படங்கள் PHOTOS

இயக்குநர் வி.சேகர், 1990-2000 வரையிலான காலங்களில் 15க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். இவரது படங்கள் அனைத்துமே, குடும்பம் பிண்ணனி கொண்ட கதைகள். இந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இவரது, சில ஹிட் படங்களின் பெயரை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த படங்களை இயக்கியவர் இவரா என்று ஆச்சரியப்படுவீர்கள். SHARE
News November 14, 2025
ECI மீதான நம்பிக்கை மக்களுக்கு அதிகரித்துள்ளது: PM

பிஹாரில் மாவோயிஸ்ட் ஆதிக்கம் அதிகமாக இருந்த போது மக்கள் வாக்களிக்கவே அச்சப்பட்டதாக மோடி தெரிவித்துள்ளார். RJD-யின் காட்டாச்சியில் வாக்குச்சாவடியில் வெளிப்படையாக வன்முறை நடக்கும் என்றும், வாக்கு பெட்டிகள் திருடப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இன்று மக்கள் அச்சமின்றி வாக்களித்துள்ளதாகவும், ECI-ன் மீது மக்கள் முன்பைவிட நம்பிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


