News January 23, 2025
UPI பேமெண்ட்: கலக்கத்தில் சிறு, குறு வியாபாரிகள்!

டிஜிட்டல் பண பரிவர்த்தனை வாயிலாக அதிக தொகை பெற்ற குறு, சிறு வர்த்தகர்களுக்கு, வணிக வரித்துறை நோட்டீஸ் அனுப்பி வருவதால், TN முழுவதும் உள்ள சிறு, குறு வர்த்தகர்கள் கலக்கமடைந்துள்ளனர். காய்கறி, மளிகைக் கடை என அனைத்திலும் UPI பரிவர்த்தனை பயன்படுத்தப்படுகிறது. இதில் GST பதிவு செய்யாத, ஆண்டுக்கு ₹40 லட்சத்திற்கு மேல் UPI பரிவர்த்தனை நடைபெற்ற வர்த்தகர்களுக்கு வணிக வரித்துறை நோட்டீஸ் அளித்து வருகிறது.
Similar News
News November 15, 2025
பள்ளி மாணவி மரணம்.. நெஞ்சை உலுக்கிய கொடுமை

குழந்தைகள் தினத்தில் பள்ளிக் குழந்தைகளை ஆசிரியர்கள் கூடுதலாக கவனிப்பார்கள். ஆனால், மகாராஷ்டிராவில் நடந்ததே வேறு. நேற்று(நவ.14) பள்ளிக்கு 10 நிமிடம் தாமதமாக சென்ற 6-ம் வகுப்பு மாணவி காஜலை, 100 முறை தோப்புக் கரணம் போடச் சொல்லி பனிஷ்மெண்ட் கொடுத்துள்ளனர். ஸ்கூல் பேக்குடன் தோப்புக் கரணம் போட்ட அந்த மாணவி, வீடு திரும்பியதும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார். இத்தகைய பள்ளிகளை என்ன செய்வது?
News November 15, 2025
காங்கிரஸ் கட்சியை ஒழிக்க வந்தவன் நான்: சீமான்

காமராஜர் மறைவுக்குப்பின் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் அழிந்துவிட்டதாக சீமான் விமர்சித்துள்ளார். மேலும் ஈழத்தின் கனவை அழித்த காங்கிரஸை ஒழிக்கவே, தான் அரசியல் களத்திற்கு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். காங்., திராவிட கட்சிகளின் தோளில் பயணிப்பதாகவும் தன்னைப் போல தனியாக 234 தொகுதியிலும் அவர்களால் தனித்து போட்டியிட முடியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News November 15, 2025
வங்கி கணக்கில் ₹2,000… வந்தது HAPPY NEWS

PM KISAN திட்டத்தின் 21-வது தவணை தொகை(₹2,000) குறித்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. நவ.19-ம் தேதி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், KYC அப்டேட் செய்யாமல் இருந்ததால், கடந்த தவணை தொகை பல்லாயிரக்கணக்கான விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. தற்போது, அவர்களுக்கு 2 தவணை தொகை ₹4,000 மொத்தமாக வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


