News November 19, 2025
UPI-ல் கடன் வழங்க தயாராகும் தனியார் வங்கிகள்

தற்போது UPI வாயிலாக மூன்றாம் தரப்பு செயலிகள் கடன் வழங்கி வருகின்றன. இதன் வட்டிவிகிதம், வங்கிகளை விட அதிகமாகும். இந்நிலையில், தனியார் வங்கிகள் UPI மூலம் கடன் வழங்கும் சேவையை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஆக்ஸிஸ், கோடக் மஹிந்திரா, HDFC உள்ளிட்ட வங்கிகள் நவி, சூப்பர்மனி போன்ற நிதி தொழில்நுட்ப வல்லுநர்களுடன் இணைந்து, கடன் திட்டங்களை வழங்க ஆயத்தமாகி வருகின்றன.
Similar News
News April 5, 2026
தி.மலை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். 2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும். 3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள். 4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.
News April 5, 2026
மேலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன்

27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ், மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் தொகுதிக்கு மட்டும் வேட்பாளரை அறிவிக்காமல் இருந்தது. இந்நிலையில், அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் MP விஸ்வநாதன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கார்த்தி சிதம்பரம் ஒருவரையும், மாணிக்கம் தாகூர் மற்றொருவரையும் வேட்பாளராக கைகாட்டியதால் இழுபறி ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
News April 5, 2026
போர்.. டிரம்ப் பரபரப்பு அறிவிப்பு

போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் இறுதியாகாவிட்டால் ஈரான் நரகமாக மாறும் என எச்சரித்து, 48 மணிநேர கெடுவை <<19569828>>டிரம்ப் விதித்துள்ளார்.<<>> இதற்கிடையே, ஈரானில் தரைவழி தாக்குதலை நடத்த திட்டமிட்டு வருவதாகவும், 300-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் தீவிர தாக்குதலை நடத்த தயார் என்றும் அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், மேற்காசிய பிராந்தியத்தில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.


