News October 5, 2025
தமிழகத்தின் அரசியலால் தீண்டாமை: RN ரவி

தமிழகத்தின் தற்போதைய அரசியலால் தீண்டாமை, பிரித்தாள்வது நிகழ்வதாக கவர்னர் RN ரவி குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் மாநிலத்தில் சமூகநீதிக்கு எதிரான சம்பவங்களை தினமும் செய்தித் தாள்களில் படிப்பது வேதனையாகவுள்ளதாகவும் கூறியுள்ளார். பங்கேற்று உரையாற்றிய அவர், கேரள அரசியல் நாராயண குருவின் கொள்கைகளை முடக்கவில்லை என தெரிவித்த அவர், தமிழக அரசியல் வள்ளலாரின் போதனைகளை பரப்ப முன்னுரிமை அளிக்கவில்லை என்றார்.
Similar News
News October 5, 2025
மூலிகை: சூப்பர் மருத்துவ குணங்களை கொண்ட சுக்கு!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, *சுக்குடன், தனியா சேர்த்து அரைத்து உண்டால், அதிக மதுவால் ஏற்பட்ட போதை குறையும்*சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி போய்விடும் *சுக்குடன், ஒரு வெற்றிலையை சேர்த்து மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும் *சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை ஆகியவற்றில் கஷாயம் செய்து பருகினால், சளி குறையும். SHARE.
News October 5, 2025
மேடையில் எமோஷனலான மோகன்லால்

நான் செல்லும் பாதையில் எனக்கு சந்தேகம் வரும்போதெல்லாம் ரசிகர்களின் ‘லாலேட்டா’ என்ற குரல் தனக்கு வழிகாட்டுவதாக மோகன்லால் கூறியுள்ளார். ’தாதா சாகேப் பால்கே’ விருது பெற்ற மோகன்லாலுக்கு கேரள அரசு விழா எடுத்தது. அதில் பேசிய அவர், இந்த அங்கீகாரம் தனக்கு மிகவும் முக்கியம் என கூறினார். மேலும், டெல்லியில் விருதை பெறும்போது எனக்கு என்ன உணர்வு ஏற்பட்டதோ அதைவிட எமோஷனலாக உணர்வதாகவும் தெரிவித்தார்.
News October 5, 2025
ஞாயிற்றுக்கிழமையில் இப்படி பண்ணி பாருங்க…

‘சண்டே வருவதும் தெரியல; போறதும் தெரியல’ என புலம்பாத ஆளில்லை. லீவு நாள் என்பதால், வீட்டு வேலை செய்து, மதியம் சும்மா படுத்து தூங்கி விட்டால், ஒரு நாள் ஒன்றுமே இல்லாமல் போய்விடும். மனசும் துவண்டுவிடும். ஆனால், உங்களின் வேலையை காலையிலேயே வேகமாக முடித்து விட்டு, மதியத்திலிருந்து குடும்பத்துடனோ, நண்பர்களுடனோ நேரத்தை செலவிட்டு பாருங்கள். மனதில் மகிழ்ச்சி கூடும். ஒரு நாள் நிறைவாக கடந்ததை உணருவீர்கள்.