News August 14, 2024
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல்: ராகுல் காந்தி

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதாக காங்., எம்பி ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். கடுமையான சட்டங்கள் இருந்தும் இது போன்ற சம்பவங்களை ஏன் தடுக்கமுடியவில்லை என கேள்வி எழுப்பிய அவர், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தான் உறுதுணையாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News October 15, 2025
வேட்பு மனு தாக்கல் செய்தார் தேஜஸ்வி யாதவ்!

பிஹார் சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி, தேஜஸ்வி யாதவ் தந்தை லாலு பிரசாத்துடன் வந்து ரகோபூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். கடந்த 1995ம் ஆண்டு முதல் லாலு பிரசாத்தின் குடும்பம் தான் இந்த தொகுதியில் வெற்றி பெற்று வந்திருக்கிறது. இந்த தேர்தலில் தேஜஸ்வி யாதவ் தலைமையில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் ‘மகாபந்தன்’ கூட்டணியை அமைத்துள்ளன.
News October 15, 2025
₹35,400 சம்பளம்: 2,570 பணியிடங்கள்

இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 2,570 (மாறுதலுக்கு உட்பட்டது) ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: Diploma, B.E, B.Tech. வயது: 18- 33. ₹35,400 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு வரும் நவம்பர் 30 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இது குறித்து மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க <
News October 15, 2025
Foxconn முதலீடு சர்ச்சை: என்னதான் நடக்கிறது?

Foxconn நிறுவனம் TN-ல் ₹15,000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக CM தெரிவித்திருந்தார். ஆனால், இதை புதிய முதலீடாக பார்க்கவில்லை என்று Foxconn கூறியது. இதனால் அரசு பொய் சொல்வதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில் விளக்கமளித்த அமைச்சர் TRB ராஜா, இந்த திட்டத்திற்கான பேச்சுவார்த்தை ஒரு வருடமாக நடந்து வருவதால், Foxconn இதை புதிய முதலீடாக கருதவில்லை என்றும், இது உறுதியான முதலீடு எனவும் தெரிவித்தார்.