News August 14, 2024
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல்: ராகுல் காந்தி

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதாக காங்., எம்பி ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். கடுமையான சட்டங்கள் இருந்தும் இது போன்ற சம்பவங்களை ஏன் தடுக்கமுடியவில்லை என கேள்வி எழுப்பிய அவர், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தான் உறுதுணையாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News January 6, 2026
அமெரிக்காவில் இருந்து புகார்.. மதுரையில் வழக்குப்பதிவு

மதுரை எல்லீஸ் நகர் சரவணன் 52 .அமெரிக்காவில் கலிபோர்னியாவில் வசிக்கிறார். இவரது எல்லீஸ் நகர் வீட்டில் அதே பகுதியைச் சேர்ந்த ஹவுஸ் பாட்ஷா என்பவர் அத்துமீறி நுழைந்து ஒரு பகுதியை ஆக்கிரமித்ததாகவும், சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும் வெளிநாட்டு வாழ் இந்தியர் செல் மூலம் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பினார். அதன் அடிப்படையில் ஹவுஸ் பாட்ஷா மீது, எஸ் எஸ் காலனி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
News January 6, 2026
மகாலட்சுமி அருள் பெற இந்த 4 விஷயங்கள் செய்யுங்க..

✦ வீட்டில் பெண் பிள்ளைகள் எப்பொழுதும் மன மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் ✦நம்மை தேடி வீட்டிற்கு வரக்கூடிய பெண்களுக்கு குங்குமம், தண்ணீர் வழங்க வேண்டும் ✦நெல்லி மரம் இருக்கின்ற வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்குமாம் ✦ஏழை எளியவர்களுக்கு தானதர்மம் செய்து பழக வேண்டும். தர்மம் நிறைந்திருக்கும் இடத்தில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும் என கூறப்படுகிறது. இப்பதிவை நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
News January 6, 2026
பொங்கல் பரிசு பணம்.. மாற்றம் செய்து அரசு புதிய அறிவிப்பு

பொங்கல் பரிசு பணம் ₹3000, வழங்க ₹6,936 கோடி ஒதுக்கப்படும் என CM ஸ்டாலின் 2 நாள்கள் முன் அறிவித்திருந்தார். இதனிடையே பொங்கல் பரிசு பணத்தை வழங்க ₹6,687 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நேற்று அரசானை வெளியிடப்பட்டுள்ளது. கிட்டதட்ட 200 கோடிக்கு மேல் அறிவிப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே ஜன. 8-ம் தேதி பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை CM ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.


