News August 15, 2024

சுதந்திர தினம் பற்றி தெரியாத உண்மைகள்

image

முதல் சுதந்திர தின கொண்டாட்டத்தில் மகாத்மா காந்தி பங்கேற்கவில்லை. கல்கத்தாவில் 1906ஆம் ஆண்டு ஆக. 7ஆம் தேதி முதன்முதலாக தேசிய கொடி ஏற்றப்பட்டது. ஆரம்பத்தில் தேசிய கொடியில் மதக் குறியீடுகள், 8 ரோஜா பூக்கள் மற்றும் ‘வந்தே மாதரம்’ என்ற வசனம் எழுதப்பட்டிருந்தது. முதல் சுதந்திர தினத்தின் போது, நமது தேசிய கீதம் எழுதப்படவில்லை. 1950ல் தான் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய தேசிய கீதம் அரசால் ஏற்று கொள்ளப்பட்டது.

Similar News

News October 22, 2025

மீண்டும் மீண்டுமா? டிரம்ப் சர்ச்சை – மோடி மெளனம்

image

இந்தியா மீது வரி விதிப்பு, போர் நிறுத்தம், ரஷ்ய எண்ணெய் குறித்து சர்ச்சை கருத்து, இந்தியா மறுப்பு, மோடி என் நண்பர்… ரிப்பீட்டு… அண்மை காலமாக டிரம்பின் வாடிக்கையாகவே மாறிவிட்டது இது. ஆனால் இது குறித்து தற்போது வரை PM மோடி மெளனம் கலைக்கவில்லை. உண்மையில் இருநாட்டு உறவுகளின் நிலை என்ன? PM மோடி மற்றும் அதிபர் டிரம்ப் இடையே என்னதான் நடக்கிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது. உங்கள் கருத்து என்ன?

News October 22, 2025

இஸ்லாமியர்களும் குழந்தையை தத்தெடுக்கலாம்: மதுரை HC

image

இஸ்லாமியர்கள் குழந்தை தத்தெடுப்பதை இஸ்லாம் மதம் அனுமதிக்கவில்லை என்று, தத்தெடுப்பு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த மதுரை HC, இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் குழந்தைகளை தத்தெடுக்கலாம். இந்த சட்டத்தில், 2015-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி, இஸ்லாம், கிறிஸ்தவம் மதத்தில் இருந்தாலும், விருப்பமுள்ளோர் குழந்தைகளை தத்தெடுக்கலாம்.

News October 22, 2025

BIG NEWS: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

image

தஞ்சாவூரில் நடைபெற இருந்த மாநில அளவிலான குடியரசு தின தடகள போட்டிகள், தொடர் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அக்.24 முதல் அக்.29-ம் தேதி வரை நடைபெற இருந்த தடகள போட்டிகளில் மாநிலம் முழுவதும் இருந்து பள்ளி மாணவர்கள் பங்கேற்கவிருந்தனர். இதனால், பாதுகாப்பு கருதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், போட்டிகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

error: Content is protected !!