News August 15, 2024
சுதந்திர தினம் பற்றி தெரியாத உண்மைகள்

முதல் சுதந்திர தின கொண்டாட்டத்தில் மகாத்மா காந்தி பங்கேற்கவில்லை. கல்கத்தாவில் 1906ஆம் ஆண்டு ஆக. 7ஆம் தேதி முதன்முதலாக தேசிய கொடி ஏற்றப்பட்டது. ஆரம்பத்தில் தேசிய கொடியில் மதக் குறியீடுகள், 8 ரோஜா பூக்கள் மற்றும் ‘வந்தே மாதரம்’ என்ற வசனம் எழுதப்பட்டிருந்தது. முதல் சுதந்திர தினத்தின் போது, நமது தேசிய கீதம் எழுதப்படவில்லை. 1950ல் தான் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய தேசிய கீதம் அரசால் ஏற்று கொள்ளப்பட்டது.
Similar News
News December 1, 2025
இனி இந்த பொருள்களின் விலை உயரும்!

இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இதில், வரி சீர்திருத்தம் தொடர்பான 2 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருள்கள் மற்றும் பான் மசாலா மீதான வரி உயர்த்தப்படலாம். இதனால் இப்பொருள்கள் விலையேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர காஃபின் கலந்த குளிர்பானங்கள், தனி விமானங்களுக்கான வரியும் உயர்த்தப்பட உள்ளதாம்.
News December 1, 2025
மானுட அதிசயமே மீனாட்சி!

சிங்கப்பூர் சலூன், GOAT, லக்கி பாஸ்கர் படங்களில் கவனம் ஈர்த்த மீனாட்சி செளத்ரி ஒரு தீவிர போட்டோஷூட் பிரியர். வாரம்தோறும் புது புதிதாக போட்டோக்கள் எடுத்து, அதை SM-ல் பகிர்ந்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைப்பார். அதேபோல இந்தவாரமும் மஞ்சள் காட்டு மைனாவாக மஞ்சள் உடையில் மினு மினுக்கிறார். புகைப்படங்களை பார்க்க மேலே Swipe செய்யவும்.
News December 1, 2025
சாக்லேட் ஐஸ்கிரீம் வித் சாதம்: என்ன கொடுமை சார் இது!

உணவு பரிசோதனை என்ற பெயரில், வினோதமான கலவைகளை உருவாக்குவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஸ்விக்கி போட்ட ஒரு வினோத உணவின் பதிவு சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது, ஆவி பறக்கும் சாதத்துடன், சாக்லேட் ஐஸ்கிரீமை கலந்து, அதை ‘best dessert’ என்று ஸ்விக்கி பதிவிட்டுள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் திட்டி வரும் நிலையில், சிலர் இதை ட்ரை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். நீங்க ட்ரை பண்ணுவீங்களா?


