News April 13, 2025
அதிமுக கூட்டணியில் முதல் கட்சியாக ஐக்கியம்

BJP- ADMK கூட்டணி அமைந்த நிலையில், முதல் கட்சியாக ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது. 2026ல் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று EPS முதலமைச்சராக பொறுப்பேற்க எல்லா வகையிலும் பணியாற்றுவோம் என அக்கட்சியின் தலைவர் நாகராஜன் அறிவித்துள்ளார். அதியமானின் ஆதித்தமிழர் பேரவை திமுக பக்கம் இருக்கும் நிலையில், இவர் அதிமுக பக்கம் சாய்ந்துள்ளார். இதனால் அருந்ததியர் மக்கள் வாக்கு சிதற வாய்ப்புள்ளது.
Similar News
News July 4, 2025
BREAKING: அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்

ஈட்டிய விடுப்பில் 15 நாள்கள் வரை அக்.1 முதல் சரண் செய்து பணப் பயன் பெற்றுக்கொள்ளலாம் என TN அரசு அறிவித்துள்ளது. 2026-ம் ஆண்டு ஏப்.1 முதல் அமலாகும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே (அக்.1 முதல்) ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறைக்கு வருகிறது. இதன் மூலம் சுமார் 8 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பயன்பெறுவர். இதற்காக ஆண்டுக்கு ₹3,561 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்யும்.
News July 4, 2025
One Last time.. ராஜஸ்தானை உலுக்கிய தற்கொலை

தனது 8 வயது மகனுக்கு துப்பட்டா அணிவித்து, நெற்றியில் குங்குமமிட்டு, தங்க நகைகளையும் போட்டு போட்டோ எடுத்துள்ளார். பின்னர், சிறுவன் உள்பட இக்குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் தண்ணீர் டேங்கில் விழுந்து தற்கொலை செய்துள்ளனர். போலீஸ் விசாரணையில் நிலத்தகராறு இருந்தது தெரியவந்துள்ளது. மேலும், தனக்கு பெண் பிள்ளை இல்லாததால் இளைய மகனை பெண்ணாக கடைசியாக அழகு பார்த்துள்ளார் தாய். இது ராஜஸ்தானில் நிகழ்ந்துள்ளது.
News July 4, 2025
₹853 கோடி சம்பளம் வாங்கும் இந்திய வம்சாவளி

IIT கான்பூரில் பட்டம் பெற்றவர் திரபித் பன்சால். இந்திய வம்சாவளியான இவர், மெட்டா நிறுவனத்தின் AGI பிரிவில் பணியமர்த்தப்பட்டுள்ளார். இவருடைய ஆண்டு சம்பளத்தைக் கேட்டால் தலையே சுற்றிவிடும். ஆண்டுக்கு ₹853 கோடி சம்பளம் கொடுக்கப்படுகிறதாம். இதற்கு முன்னதாக பெங்களூரு இந்திய ஆராய்ச்சி நிறுவனம், பேஸ்புக், கூகுள் & மைக்ரோசாஃப்ட் ஆகிய நிறுவனங்களிலும் அவர் பயிற்சிப் பணி பெற்றுள்ளார்.