News August 7, 2024
மத்திய அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஐகோர்ட்

பெங்களூரு குண்டுவெடிப்புக்கு தமிழர்கள்தான் காரணம் என்று ஆதாரமின்றி பேசிய மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே, செய்தியாளர் சந்திப்பை கூட்டி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. செய்தியாளர் சந்திப்புக்கு பதில் மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதாக அமைச்சர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
Similar News
News November 28, 2025
வந்துட்டான்.. வந்துட்டான்! அவெஞ்சர்ஸ்: Doomsday அப்டேட்!

Avengers: Doomsday படத்தின் மூலம், Marvel-ன் மிகப்பெரிய ஹீரோ கேரக்டரில் இருந்து கொடூரமான வில்லனாக மாறியுள்ளார் ராபர்ட் டவுனி Jr. அவரை ‘Doctor Doom’ கேரக்டரில் பார்க்க ரசிகர்கள் பெரும் ஆர்வத்தில் உள்ள நிலையில், போட்டோ ஒன்றை அவர் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அதில், Ironman & Doctor Doom கைகள் இணைவதை போல சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனால், படத்தின் அப்டேட் ஏதாவது வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 28, 2025
₹50 கட்டினால், ₹35 லட்சம் வரை கிடைக்கும்! அடடே திட்டம்

Post Office-ன் கிராம சுரக்ஷா யோஜனா திட்டத்தில் 19 வயது முதல் தினமும் ₹50 கட்டினால், 80 வயதாகும் போது அதிகபட்சமாக ₹35 லட்சம் வரை கிடைக்கும். இதில், 55 வயதுக்குட்பட்டவர்கள் சேரலாம். திட்டத்தில் சேர்ந்தவர் மெச்சூரிட்டி தொகையை பெறும் முன் இறக்க நேர்ந்தால், நாமினிக்கு அந்த தொகை வழங்கப்படும். இத்திட்டத்தில் சேர அருகில் உள்ள தபால் அலுவலகத்தை அணுகுங்கள். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 28, 2025
TN-ன் ஒரே தீவிரவாதி கவர்னர் ரவி: அப்பாவு

தமிழகத்தில் இருக்கக்கூடிய ஒரே ஒரு தீவிரவாதி கவர்னர் ரவிதான் என சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். ஆளுநர் இதற்கு முன்பு பணியாற்றிய அனைத்து பகுதிகளும் தீவிரவாதிகள் நிறைந்த பகுதி என குறிப்பிட்ட அவர், TN-யிலும் அதே போன்று நடக்காதா என அவர் எதிர்பார்ப்பதாக சாடியுள்ளார். மேலும், TN-ல் சட்டம் ஒழுங்கு பிரச்னை இல்லை எனவும், இங்கு மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


