News August 7, 2024
மத்திய அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஐகோர்ட்

பெங்களூரு குண்டுவெடிப்புக்கு தமிழர்கள்தான் காரணம் என்று ஆதாரமின்றி பேசிய மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே, செய்தியாளர் சந்திப்பை கூட்டி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. செய்தியாளர் சந்திப்புக்கு பதில் மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதாக அமைச்சர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
Similar News
News November 22, 2025
சற்றுமுன்: CM ஸ்டாலின் நேரில் கண்ணீர் அஞ்சலி

உடல்நலக் குறைவால் மறைந்த <<18358061>>மூத்த கவிஞர் ஈரோடு தமிழன்பனின்<<>> உடலுக்கு CM ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். முன்னதாக, கவிஞர் வைரமுத்து, மதன் கார்க்கி உள்ளிட்டோரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். ஈரோடு தமிழன்பனின் மறைவுக்கு அன்புமணி, தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது உடல் நாளை மாலை அரும்பாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.
News November 22, 2025
திமுகவில் பாலியல் SIR-கள் உள்ளனர்: EPS

திமுக ஆட்சியில், அக்கட்சியினரிடம் இருந்தே பெண்களை காக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாக EPS சாடியுள்ளார். அமைச்சருக்கு நெருக்கமான அனுதாபி என்ற பெயரில் விழுப்புரம் திமுக ஒன்றிய செயலாளரான பாஸ்கரன், கடந்த 6 மாதங்களாக பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக EPS குற்றஞ்சாட்டியுள்ளர். இதுபோன்ற திமுக பாலியல் SIR-களை கட்டுப்படுத்த கையாலாகாத தலைவராக CM இருக்கிறார் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
News November 22, 2025
இந்திய அரசு மீது மக்களுக்கு எவ்வளவு நம்பிக்கை தெரியுமா?

2025 எடெல்மேன் டிரஸ்ட் பாரோமீட்டரின்படி, அரசாங்கம் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை அளவிடும் உலகளாவிய கணக்கெடுப்பில், இந்தியா அசத்தியுள்ளது. இந்த பட்டியலில், எந்தெந்த நாடுகள் டாப் 8 இடங்களை பிடித்துள்ளன என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க.
இதில் இந்தியா எந்த இடத்தில் இருக்கு என்று பாருங்க, கமெண்ட்ல சொல்லுங்க. SHARE


