News March 19, 2025
தஞ்சை துக்காச்சியம்மன் கோயிலுக்கு UNESCO விருது

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள துக்காச்சியம்மன் கோயிலுக்கு யுனெஸ்கோ விருது வழங்கி கெளரவித்துள்ளது. 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலின் தொன்மை மாறாமல், புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட நிலையில், விருது வழங்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. இந்த கோயிலில் துர்கை அம்மன் இறைவனை வழிபட்டதால், துர்க்கை ஆட்சி என்ற பெயர் துக்காச்சி என மருவியதாக சொல்லப்படுகிறது.
Similar News
News March 19, 2025
சென்செக்ஸ் 148 புள்ளிகள் உயர்வு

இந்தியப் பங்குச் சந்தையின் குறியீட்டு எண்கள் தொடர்ந்து 3 வது நாளாக ஏற்றத்துடன் நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 148 புள்ளிகள் உயர்ந்து 75,449 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 73 புள்ளிகள் அதிகரித்து 22,907 புள்ளிகளிலும் வர்த்தகம் நிறைவடைந்து. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 31 பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகியுள்ளது.
News March 19, 2025
எம்.சான்ட் விலை உயர்வு… வீடு கட்டும் செலவு அதிகரிக்கும்

விலை உயராத பொருளே இருக்காது போல. தற்போது எம்.சான்ட், பி.சான்ட் விலைகள் உயர்ந்துள்ளன. 1 டன் எம்.சான்ட் ₹650இல் இருந்து ₹1,250ஆகவும், பி.சான்ட் ₹750இல் இருந்து ₹1,500ஆக அதிகரித்துள்ளது. இதனால் ஒரு லாரி எம்.சான்ட் (6 unit) ₹55,000ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால், வீடு கட்டும் செலவு 1 சதுர அடிக்கு ₹100 அதிகரிக்கும். எனவே, விலையை முறைப்படுத்த வேண்டுமெனவும் அரசுக்கு காேரிக்கை எழுந்துள்ளது.
News March 19, 2025
TVK சார்பில் தண்ணீர் பந்தல்: விஜய் உத்தரவு

TVK சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் அமைக்குமாறு நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார். தங்கள் மாவட்டங்களில் உள்ள மாநகரம், நகரம், ஒன்றியம், வார்டு மற்றும் வட்டம் என அனைத்து இடங்களிலும் கட்சி நிர்வாகிகள் தண்ணீர் பந்தல் அமைக்க பரிந்துரைத்துள்ளார். மேலும், தாங்கள் அமைத்த தண்ணீர் பந்தலில் தண்ணீர் உள்ளதா? என தினந்தோறும் தவறாமல் கவனிக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.