News January 4, 2025
தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலை? சிபிஎம் கேள்வி

தமிழக அரசு அறிவிக்கப்படாத அவசர நிலையை பிரகடனப்படுத்தி விட்டதா என CPM மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சாடியுள்ளார். தமிழகத்தில் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர், விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எதிராக திமுக அரசு செயல்பட்டால், தாங்கள் போராடுவோம் எனவும் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணிக்குள் எழுந்துள்ள இந்த விமர்சனம் TN அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Similar News
News September 15, 2025
என்ன முடிவு எடுக்கப்போகிறார் செங்கோட்டையன்?

அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று கலகக்குரல் எழுப்பியுள்ள செங்கோட்டையன், EPS-க்கு விடுத்த கெடு இன்றுடன் முடிவடைகிறது. இதனால், இன்று அவர் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்று பெரும் எதிர்பார்ப்பு, அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. இதுதொடர்பாக இன்னும் சற்றுநேரத்தில் தனது ஆதாரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.
News September 15, 2025
மூலிகை: ஆமணக்கும் அற்புத மருத்துவ குணங்களும்!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி,
◆ஆமணக்கு எண்ணெய் மூட்டு & தசை வலியைப் போக்க சிறந்தது.
மேலும், முகப்பரு, தோல் வறட்சி, முடி வளர்ச்சி போன்ற பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது.
◆கண்கள் சிவந்திருந்தால், இந்த எண்ணெய்யை 2 துளியை கண்களில் விட குணமாகும்.
◆ஆமணக்கு இலையுடன் கீழாநெல்லி இலையைச் சேர்த்து அரைத்து, எலுமிச்சம்பழம் அளவிற்கு காலையில் எடுத்து கொண்டால், மஞ்சள் காமாலை குணமாகும். SHARE.
News September 15, 2025
அரசு பள்ளிகளில் வருகிறது AI ரோபோட்டிக்ஸ் Labs

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் அதிநவீன ரோபோட்டிக்ஸ் ஆய்வகங்கள் அமைக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன. முதற்கட்டமாக மாவட்டத்திற்கு ஒன்று வீதம் மொத்தம் ₹15 கோடியில் ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன. வரும் நவம்பர் மாதத்திற்குள் இந்த பணிகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளன. இதன்படி, 6 – 9ம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்திற்கு 2 பாடவேளைகளில் AI, ரோபோட்டிக்ஸ் வகுப்புகள் நடைபெறும்.