News July 14, 2024
உரிமை கோரப்படாத சடலங்கள்: தமிழக அரசுக்கு நோட்டீஸ்

ரயில் விபத்து, சாலை விபத்து உள்ளிட்டவற்றில் பலியாகி உரிமை கோரப்படாமல் பிணவறையில் வைக்கப்பட்டுள்ள சடலங்கள் குறித்து உரிய விதிகள், நடைமுறைகளை வகுக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தன்னார்வ தொண்டு அமைப்பு மனு தொடுத்துள்ளது. இதை விசாரித்த நீதிபதி மகாதேவன் தலைமையிலான அமர்வு, இதுகுறித்து வரும் ஆகஸ்ட் 1க்குள் பதிலளிக்கக்கோரி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.
Similar News
News November 22, 2025
பஞ்சாங்கத்தை மாற்றக்கூடியவர் CM: சேகர் பாபு

<<18347216>>பஞ்சாங்கப்படி<<>> எதிர்க்கட்சி ஆட்சிக்கு வரும் என்று நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, பஞ்சாங்கத்தையே மாற்றக்கூடிய மதிநுட்பம் கொண்டவர் CM ஸ்டாலின் என்று தெரிவித்துள்ளார். 2021-ல் இதே பாஜக, ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லை, ஆட்சியமைக்க மாட்டார் என்று சொன்னதாக குறிப்பிட்ட அவர், அப்போதிருந்தே அவர்களுக்கு CM தோல்வியையே பரிசாக அளித்து வருவதாக கூறினார்.
News November 22, 2025
மறைந்தார் பன்முக வித்தகர் ஈரோடு தமிழன்பன்

மறைந்த <<18358061>>ஈரோடு தமிழன்பன்<<>> திரைத்துறையிலும் பணியாற்றி இருக்கிறார். 1984-ல் ’அச்சமில்லை அச்சமில்லை’ படத்தில் ’கரிசல் தரிசு’ & ’கையில காசு’ ஆகிய 2 பாடல்களை எழுதியிருக்கிறார். அத்துடன், ’நீயும் நானும்’ படத்திலும் பாடலாசிரியராக பணியாற்றியுள்ளார். இயக்கத்திலும் ஆர்வம் இருந்ததால், 1983-ல் ’வசந்தத்தில் வானவில்’ படத்தில் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார். அப்படம் ரோம் திரைப்பட விழாவில் விருது வென்றது.
News November 22, 2025
இனி தனியாரும் அணு மின்சக்தியில் காலூன்றலாம்!

வரும் டிசம்பர் 1-ம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில், 10 புதிய மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உயர்கல்வி, தேசிய நெடுஞ்சாலை, காப்பீடு என பல துறைகளில் மறுசீரமைப்பு கொண்டு வரப்பட உள்ளது. குறிப்பாக, இதுவரை அரசு மட்டுமே தொடங்கி நடத்தி வந்த அணு மின் நிலையங்களை, இனி தனியாரும் நடத்தும் வகையில் மசோதா அறிமுகப்படுத்தப்பட உள்ளது.


