News October 20, 2025
மாரி உலகத்தை விட்டு வெளிவர முடியவில்லை: லிங்குசாமி

மாரி செல்வராஜின் ‘பைசன்’ படத்தை பார்த்து இயக்குநர் லிங்குசாமி வெகுவாக பாராட்டியுள்ளார். ‘பைசன்’ படத்தை பார்த்துவிட்டு மாரியின் உலகத்தை விட்டு தன்னால் வெளிவர முடியவில்லை என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். துருவ் விக்ரம், பசுபதி, லால் ஆகியோரின் கதாபாத்திரங்கள் அற்புதமாக எழுதப்பட்டு இருந்ததாகவும், நிவாஸ் கே பிரசன்னாவின் இசை படத்துக்கு உயிரூட்டியுள்ளதாகவும் அவர் சிலாகித்துள்ளார்.
Similar News
News October 20, 2025
வரலாற்றில் இன்று

*1963 – இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து பிறந்தநாள்.
*1974 – பாடலாசிரியர் பா.விஜய் பிறந்தநாள்.
*1978 – இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் பிறந்தநாள் .
*1991 – உத்தரகாசியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 1,000 பேர் வரை உயிரிழந்தனர்.
*2008 – தமிழ திரைப்பட இயக்குநர் ஸ்ரீதர் நினைவுநாள்.
News October 20, 2025
நடிகர் அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீபிரசாத்

முன்னணி இசையமைப்பாளரான தேவி ஸ்ரீபிரசாத் நாயகனாக அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தெலுங்கில் வேணு எல்டண்டி இயக்கத்தில் உருவாகவுள்ள ‘எல்லம்மா’ படத்தில் அவர் நடிக்க உள்ளாராம். இதற்காக முழுமையாக தனது உடலமைப்பை மாற்றி வருகிறாராம். பல்வேறு முன்னணி படங்களுக்கு இசையமைத்து வந்தாலும், நடிக்க ஆசையிருப்பதை சில பேட்டிகளில் தேவி ஸ்ரீபிரசாத் வெளிப்படுத்தி இருக்கிறார்.
News October 20, 2025
தீபாவளிக்கு ஆட்டுக்கால் பாய செய்ய ரெடியா?

முதலில் சோம்பு, சீரகம், மிளகு, கசகசா, தேங்காய் துருவல், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, கருவேப்பிலை, வெங்காயம் இஞ்சி பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு அரைத்த தேங்காயை சேர்ந்து, வேக வைத்த ஆட்டுக்காலை தண்ணீரோடு ஊற்றி கொதிக்கவிடவும். தேவையான அளவு உப்பு சேர்த்து, குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்கினால் பாய ரெடி.