News February 27, 2025

நாளை ஆஜராக முடியாது: போலீசுக்கு சீமான் சவால்

image

நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில், ஆஜராக போலீஸ் சம்மன் ஒட்டிய நிலையில், நாளை வர முடியாது; என்ன செய்ய முடியும் என்று போலீசாருக்கு சீமான் சவால் விடுத்துள்ளார். நான் ஆஜராவேன் என உறுதியளித்த பின்னரும் காவல் துறைக்கு என்ன அவசரம் வந்தது. இந்த வழக்கில் என்னை மீண்டும் மீண்டும் விசாரித்து அசிங்கப்படுத்தவே முயற்சி நடக்கிறது. காவல் துறையின் இதுபோன்ற நடவடிக்கைகளை கண்டு நான் பயப்பட மாட்டேன் என தெரிவித்தார்.

Similar News

News February 27, 2025

இதை செய்யவில்லை என்றால் ரேஷன் அட்டை நீக்கப்படுமா?

image

மாநிலம் முழுவதும் 3.56 கோடி முன்னுரிமை (PHH), அந்தியோதயா ரேஷன் அட்டைதாரர்களில் இதுவரை சுமார் 76 லட்சம் பேர் விரல் ரேகை பதிவு செய்யவில்லை. இதற்கு மத்திய அரசு வழங்கிய கால அவகாசம் வரும் மார்ச் 31இல் முடிவடைகிறது. அதற்குள் விரல் ரேகை பதிவு செய்யாதவர்கள் பதிவு செய்துவிடவும். மார்ச்சுக்கு பின் இலவச அரிசி தொடர்ந்து கிடைக்குமா, இல்லையென்றால் அந்த அட்டைகள் நீக்கப்படுமா? என சந்தேகம் எழுந்துள்ளது.

News February 27, 2025

டாஸ்மாக் போர்டுகளில் எண்.. உறுதி செய்ய அறிவுறுத்தல்

image

<<15597315>>டாஸ்மாக்<<>> போர்டுகளில் எண்கள் இருப்பதை உறுதி செய்ய தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. இதுதாெடர்பாக டாஸ்மாக் மேலாளர்களுக்கு புதிய அறிவுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. போர்டுகளில் எண்கள் அழிக்கப்பட்டதால், வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்க முடியாமல் இருந்தனர். போர்டுகளில் எண்கள் உறுதி செய்யப்பட்டால், இனி வாடிக்கையாளர்களால் புகார் அளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

News February 27, 2025

தீண்டாமையை கடைபிடிக்கும் மரங்கள்

image

காடுகளில் வளரும் சிலவகை மரங்கள் ஒன்றை ஒன்று தொட்டுக் கொள்வதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். இதனை ஆங்கிலத்தில் ‘Crown Shyness’ என்று அழைக்கின்றனர். இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. குறிப்பாக, அருகில் இருக்கும் மரத்திற்கு கிடைக்கும் சூரிய ஒளியை மறைத்துவிடக் கூடாது என்பதற்காக மரங்கள் இந்த முறையை கடைபிடிப்பதாக சொல்லப்படுகிறது. நீங்கள் இதை நோட் பண்ணியிருக்கீங்களா?

error: Content is protected !!