News January 20, 2025
மனம் வெறுத்துப்போன உமேஷ்

2025 IPL மெகா ஏலத்தில் தன்னை எந்த அணியும் வாங்காதது பேரதிர்ச்சியாக இருந்ததாக உமேஷ் யாதவ் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். ஏலத்தில் மிகவும் பின்னால் அறிவிக்கப்பட்டதால், பணம் இல்லாமல் இருந்திருக்கும் அல்லது அணிகளின் வியூகம் காரணமாக தேர்வு செய்யப்படாமல் இருந்திருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தன்னால் 140 கி.மீ வேகத்தில் பவுலிங் வீச முடியாதபோது ஓய்வு அறிவித்து விடுவேன் என்றார்.
Similar News
News March 11, 2026
பலன்களை அள்ளி தரும் சுண்டைக்காய்!

➤சுண்டைக்காய் சாம்பார், காரக்குழம்பு ருசியாக இருப்பது மட்டுமின்றி, உடலுக்கு பல நன்மைகளையும் அளிக்கும். ➤வயிற்றுவலி, உப்புசம், ஏப்பம் போன்ற செரிமானப் பிரச்னைகளை சரிசெய்யும் ஆற்றல் சுண்டைக்காய்க்கு உள்ளதாக அகத்தியர் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ➤இதன் வற்றல் சூரணத்தை மோரில் கலந்து பருக, குடலில் உள்ள நல்ல நுண்கிருமிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். SHARE IT.
News March 11, 2026
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது!

தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. ஏப்.6-ம் தேதி வரை நடைபெறவுள்ள இத்தேர்வுகளை 8,82,806 மாணவ, மாணவிகள், 25,801 தனித் தேர்வர்கள், 395 சிறைவாசிகள் என மொத்தமாக 9,09,002 பேர் எழுதவுள்ளனர். தேர்வுப் பணிகளில் 45,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தேர்வு முறைகேடுகளை தடுக்க சுமார் 5,000 பறக்கும் படையினர் ஈடுபடவுள்ளனர். ALL THE BEST STUDENTS
News March 11, 2026
TN-ல் பணியாற்றிய காலம் பொற்காலம்: RN ரவி

மேற்குவங்க கவர்னராக மாற்றப்பட்ட ரவி TN மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். கடந்த 54 மாதங்கள், TN மக்களோடு கலந்து பழகி, அவர்களின் அன்பில் திளைத்து, தமிழின் பெருமையிலும் தமிழ் மக்களின் பெருமிதத்திலும் மகிழ்ந்திருந்ததாக கூறிய அவர், இப்போது TN மக்களை விட்டுப் பிரிகிற சூழல் வந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், TN-ல் செலவிட்ட இந்த நாள்கள், தன் வாழ்வின் பொற்கால நாள்கள் எனவும் தெரிவித்துள்ளார்.


