News March 16, 2025

உக்ரைன் ராணுவ வீரர்கள் ரஷ்ய ராணுவத்தால் சுற்றிவளைப்பு?

image

உக்ரைன் வீரர்கள் ஆயிரக்கணக்கானோர் ரஷ்ய ராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், குர்ஸ்கில் ஊடுருவிய உக்ரைன் வீரர்களை உயிருடன் புதின் விட வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் ஆயுதங்களை போட்டு சரணடைந்தால், உயிருடன் விடுவதாக புதின் கூறியிருந்தார். ஆனால் வீரர்கள் சுற்றிவளைக்கப்படவில்லை என உக்ரைன் மறுத்துள்ளது.

Similar News

News March 18, 2025

BREAKING: அதிகாலையில் மீனவர்கள் கைது

image

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர். ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், அதிகாலையில் ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி விசைப்படகுடன் சிறை பிடிக்கப்பட்டனர். தொடரும் இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

News March 18, 2025

6 நாட்களுக்கு மழை பெய்யக் கூடும்: வானிலை ஆய்வு மையம்

image

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், 6 நாட்களுக்கு மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் மார்ச் 23 வரை, TNஇல் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. இதேபோல மார்ச் 21 வரை, வெப்ப நிலையில் பெரிய மாற்றம் இருக்காது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News March 18, 2025

போர்… டிரம்ப்-புதின் இன்று பேச்சுவார்த்தை

image

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன், USA அதிபர் டிரம்ப் இன்று தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்துகிறார். ரஷ்யா-உக்ரைன் போர் 3 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர, PM மோடி உள்பட பல நாட்டுத் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், டிரம்ப்-புதின் ஆகியோரது இன்றைய சந்திப்பு உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. போர் முடிவுக்கு வருமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

error: Content is protected !!