News October 8, 2025
ஹீரோவாகும் உதயநிதியின் மகன் இன்பநிதி

DCM உதயநிதியின் மகன் இன்பநிதி கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்பநிதி தற்போது நடிப்பு பயிற்சி எடுத்து வருகிறார். அதன் வீடியோக்கள் SM-ல் வெளியாகி வைரலானது. அண்மையில் இன்பநிதிக்கு ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் தலைமை பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், அவர் ஹீரோவாக களமிறங்க உள்ளதாகவும் அந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்க உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.
Similar News
News October 9, 2025
BREAKING: அதிமுக கூட்டணியில் புதிய கட்சி.. இபிஎஸ் அதிரடி

அதிமுக கூட்டணியில் தவெக இணைய உள்ளதாக EPS மறைமுகமாக கூறியுள்ளார். குமாரபாளையம் தேர்தல் பரப்புரையில், அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைப்போம் என EPS பேசினார். அப்போது, கூட்டத்திற்கு நடுவே சிலர் தவெக கொடியை உயர்த்தி உற்சாகமாக கோஷமிட்டனர். அப்போது, ‘கொடி பறக்குது, கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டது ஸ்டாலின் அவர்களே!’ என உணர்ச்சி பொங்க பேசினார். இது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.
News October 9, 2025
10th தகுதியிலான தேர்வுக்கு 42 PhD ஆய்வாளர்கள் விண்ணப்பம்

நாட்டில் உள்ள வேலைவாய்ப்பு நிலைமைக்கு இதைவிட சிறந்த உதாரணம் இருந்துவிட முடியாது. ம.பி.,யில் 7,500 போலீஸ் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். 10th தகுதி மட்டுமே கொண்ட இப்பணிக்கு 42 PhD ஆய்வாளர்கள், ஆயிரக்கணக்கான டிகிரி, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான சம்பளம் ₹19,500 – ₹62,000 என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் கருத்து என்ன?
News October 9, 2025
சண்டே ரயில்வே ஸ்டேஷனே இயங்காது.. எங்கு தெரியுமா?

மேற்கு வங்கத்தில் உள்ள ‘ரேநகர்’ ரயில் நிலையம் தான் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்படுகிறது. இங்கு நிற்கும் ஒரே பயணிகள் ரயிலான பான்குரா-மாசகிராம் எக்ஸ்பிரஸ், ஞாயிறு அன்று இயங்காததால் இந்த ரயில் நிலையம் மூடப்படுகிறதாம். அதேநேரம், இங்கு விநியோகிக்கப்படும் டிக்கெட்களை வாங்க, ஞாயிறு அன்று ரயில் நிலைய மேலாளர் பர்தாமன் நகருக்கு செல்வதால் அன்று ரயில் இயங்குவதில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.