News April 4, 2025
நீட் விவகாரத்தில் உதயநிதி கள்ள மவுனம் : இபிஎஸ்

நீட் தேர்வை வைத்து திமுக அரசியல் செய்வதாக இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தபின்பு, 20 பேர் நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்ததற்கு என்ன பதில், நீட் தேர்வு இருக்காது என்று கூறிய உதயநிதி கள்ள மவுனம் சாதிப்பது ஏன் என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய அவர், நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News April 10, 2025
2 கண்டங்கள், 14 நாடுகள், 30000 கிமீ: உலகின் நீளமான ரோடு!

பான் அமெரிக்க ரோடு, வட அமெரிக்காவின் அலாஸ்காவில் இருந்து, தென் அமெரிக்காவின் அர்ஜென்டினா வரை நீளுகிறது. மொத்தமாக 14 நாடுகள், 30 ஆயிரம் கிமீ கடக்கும் ரோட்டில் ஒரு கட்டோ, ஒரு யூ-டர்னோக்கூட வராது. நேராக, போய்க்கிட்டே இருக்கணும். இந்த ரோட்டை கடக்க 60 நாள்கள் ஆகுமாம். அதுவும் ஒரு நாளைக்கு 500 கி.மீட்டரை கடந்தால் தான்! அதனாலேயே, பலருக்கும் போர் அடித்து விடும். நீங்க இதில் ட்ராவல் பண்ண தயாரா!
News April 10, 2025
நாமக்கல் MP வீட்டில் வெடிகுண்டு வீச்சு!

நாமக்கல் தொகுதி MP மாதேஸ்வரன் வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. பொட்டணம் பகுதியில் உள்ள அவருக்குச் சொந்தமான வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் ஏசி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமானது. சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், தடயவியல் நிபுணர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 10, 2025
இன்று கனமழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நேற்று மாலை காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுக்குறைந்தது. இன்று காலை நிலவரப்படி, அது மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுவதால், இன்று கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக MET கணித்துள்ளது. மேலும், 16ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும்.