News March 18, 2024
கொங்கு மண்டலத்தில் தேர்தல் பொறுப்பேற்கும் உதயநிதி!

கொங்கு மண்டலத்தை ஆளுங்கட்சியான திமுகவின் கோட்டையாக்க வேண்டுமென ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். அதனால் தான் கோவை தொகுதியில் திமுகவே நேரடியாகக் களமிறங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. கொங்கு மண்ணில் எக்காரணம் கொண்டும் பாஜக வெற்றிபெறக் கூடாது என்பதற்காக தேர்தல் பணியை முடிக்கிவிட்டுள்ள திமுக தலைமை, அந்த மண்டலத்தின் தேர்தல் பொறுப்பாளராக உதயநிதியை நியமிக்க முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
Similar News
News December 31, 2025
தருமபுரி: தேங்காய் பறிக்க சென்றவர் பரிதாப பலி!

தருமபுரி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மோளையானூரை சேர்ந்தவர் சிவராஜ் (65). மரம் ஏறும் தொழிலாளியான இவர், கோழிமேக்கனூர் பிரதீப் என்பவரின் தோட்டத்திற்கு தேங்காய் பறிக்க சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி மரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 31, 2025
அதிமுக – பாஜக கூட்டணி.. பிரச்னை வெடித்தது

TN-ல் NDA கூட்டணி வென்றால், பாஜக ஆட்சியில் அங்கம் வகிக்குமா என்பதை டெல்லி தலைமைதான் முடிவு செய்யும் என ஹெச்.ராஜா பேசியுள்ளார். முன்னதாக, ’கூட்டணி ஆட்சி’ முழக்கத்தால் அதிமுக-பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. இது சமீபகாலமாக இல்லாமல் இருந்த நிலையில் தற்போது அதை மீண்டும் ஹெச்.ராஜா தொடங்கி வைத்திருக்கிறார். இதனால் அதிமுக – பாஜக கூட்டணியில் மீண்டும் பிரச்னை வெடிக்கலாம் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News December 31, 2025
ஒரே ஒரு இன்ஸ்டாகிராம் பதிவு.. ₹80,915 கோடி நஷ்டம்!

தலைப்பை படித்ததும் நம்ப முடியவில்லையா? உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலை 2022-ல் ‘insane’ என கண்டித்தார் ரஷ்யாவின் Tinkoff வங்கியின் நிறுவனர் ஒலெக் டின்கோவ். அந்த ஒரே பதிவு அவரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டது. பங்குகளை விற்காவிட்டால் வங்கி தேசியமயமாக்கப்படும் என ரஷ்ய அதிகாரிகள் எச்சரித்ததாக கூறப்பட்ட நிலையில், அவர் தனது 35% பங்குகளை விற்றுள்ளார். இதன் காரணமாக, அவர் ₹80,915 கோடியை இழந்துள்ளார்.


