News April 14, 2024
உதயநிதி ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை

ஊட்டிக்கு தேர்தல் பரப்புரைக்காக அமைச்சர் உதயநிதி இன்று ஹெலிகாப்டரில் வந்திறங்கினார். அப்போது, அவரது ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நீலகிரி தொகுதியில் போட்டியிடும் ஆ.ராசாவை ஆதரித்து உதயநிதி பரப்புரை மேற்கொள்ள உள்ளார். முன்னதாக, நேற்று ராமநாதபுரத்தில் பிரசாரத்திற்காக அண்ணாமலை சென்ற ஹெலிகாப்டரிலும் பறக்கும் படையினர் சோதனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 6, 2025
சென்னை மக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னையில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை & புறநகர் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும், மேலும் ஒரு சிலப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க்
News December 6, 2025
சிக்கலில் திமுக அமைச்சர்கள்?

K.N.நேரு மீதான நகராட்சி நிர்வாகத்துறை முறைகேடு வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இதை மீண்டும் தூசிதட்ட முடிவு எடுத்துள்ளதாம் ED. அத்துடன், செந்தில் பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன், MP கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் மீதான வழக்குகளையும் மீண்டும் விசாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல, இம்மாத இறுதிக்குள் சில சீனியர் அமைச்சர்களைக் குறிவைத்து ரெய்டு நடக்க இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.
News December 6, 2025
விஜய் உடன் கைகோர்க்கிறார் பிரபல நடிகர்

அரசியலில் நுழைந்ததால் ‘ஜனநாயகன்’ தான் கடைசி படம் என விஜய் அறிவித்துவிட்டார். இதனால், ஜனநாயகன் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய்க்கு farewell கொடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக, இவ்விழாவில் பங்கேற்க ரஜினி, கமல், அஜித், எஸ்கே, தனுஷ், சிம்பு உள்ளிட்ட நட்சத்திரங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். இதில், ஒரே மேடையில் விஜய்யுடன் கைகோர்க்க முதல் ஆளாக தனுஷ் ஓகே சொல்லி விட்டதாக கூறப்படுகிறது.


