News April 14, 2024

உதயநிதி ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை

image

ஊட்டிக்கு தேர்தல் பரப்புரைக்காக அமைச்சர் உதயநிதி இன்று ஹெலிகாப்டரில் வந்திறங்கினார். அப்போது, அவரது ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நீலகிரி தொகுதியில் போட்டியிடும் ஆ.ராசாவை ஆதரித்து உதயநிதி பரப்புரை மேற்கொள்ள உள்ளார். முன்னதாக, நேற்று ராமநாதபுரத்தில் பிரசாரத்திற்காக அண்ணாமலை சென்ற ஹெலிகாப்டரிலும் பறக்கும் படையினர் சோதனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 2, 2025

BREAKING: வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

image

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவைக் கண்டுள்ளது. நேற்று 34 காசுகள் சரிந்த நிலையில், இன்றும் 31 காசுகள் சரிந்து ₹89.92 ஆக உள்ளது. இதனால், கச்சா எண்ணெய் உள்ளிட்ட இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அதன் நிறுவனங்கள் கூடுதல் செலவு செய்ய நேரிடும் என்பதால், விலைவாசி உயர வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

News December 2, 2025

கரூர்: பாதிக்கப்பட்டவர்கள் மனு அளிக்கலாம்

image

கடந்த செப்.27-ல், கரூரில் விஜய்யின் பரப்புரையில் ஏற்பட்ட அசம்பாவிதத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணையை CBI நடத்தி வருகிறது. இந்நிலையில், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள், கரூர் CBI அலுவலகத்தில் இன்று காலை 10:30 மணி முதல் நேரடியாக மனு அளிக்கலாம் என்று அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். முன்னதாக, தவெக தலைமை நிர்வாகிகளிடம் CBI விசாரணை நடத்தியது.

News December 2, 2025

SELFIE OF THE DAY ❤️

image

ஓய்வு பெற்று விட்டாலும், உலக கிரிக்கெட்டின் முக்கிய ஸ்டாராகவே தோனி திகழ்கிறார். அவரின் ஒரு போட்டோ வெளியானாலும், அன்றைய தினம் அதுதான் ட்ரெண்டிங். பெங்களூருவில் நடைபெற்ற கின்லே நிறுவனத்தின் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அவர் எடுத்து Selfie வைரலாகி வருகிறது. மீண்டும் ‘தல’ தோனியை கிரவுண்டில் பார்க்க, எப்போது மார்ச் மாதம் வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

error: Content is protected !!