News April 14, 2024
உதயநிதி ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை

ஊட்டிக்கு தேர்தல் பரப்புரைக்காக அமைச்சர் உதயநிதி இன்று ஹெலிகாப்டரில் வந்திறங்கினார். அப்போது, அவரது ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நீலகிரி தொகுதியில் போட்டியிடும் ஆ.ராசாவை ஆதரித்து உதயநிதி பரப்புரை மேற்கொள்ள உள்ளார். முன்னதாக, நேற்று ராமநாதபுரத்தில் பிரசாரத்திற்காக அண்ணாமலை சென்ற ஹெலிகாப்டரிலும் பறக்கும் படையினர் சோதனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 22, 2025
பண மழை கொட்டும் 3 ராசிகள்

வரும் 26-ம் தேதி விருச்சிக ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி தொடங்கவுள்ளது. இதனால் பின்வரும் 3 ராசியினருக்கு அதிக நற்பலன்கள் கிடைக்கும் எனக் கணிக்கப்படுகிறது: *சிம்மம்- வருமானம், முதலீட்டுக்கு லாபமும் அதிகரிக்கும். புதிய வசதிகள் கிடைக்கலாம் *மகரம்- பதவி உயர்வுக்கு வாய்ப்பு, வணிகத்தில் லாபம். *கடகம்-தொழிலில் வெற்றி கிடைக்கும். வருமானம், நிதிநிலை மேம்படும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
News November 22, 2025
30 வயதுக்குமேல் உள்ள ஆண்களே.. இத கவனியுங்க!

ஆண்களுக்கும் Skin Care அவசியம். அதிலும் 30 வயதை கடந்த ஆண்கள் சிலவற்றை பின்பற்றாமல் போனால் சீக்கிரமே வயதானவர்கள் போல தோற்றமளிப்பீர்கள். எனவே, என்றென்றும் இளமையாக தோற்றமளிக்க இந்த 4 விஷயங்களை பின்பற்றுங்கள். ➤மைல்டான க்ளன்சரை பயன்படுத்துங்கள் ➤மாய்ஸ்சரைசர், சன் ஸ்கிரீன் மிக மிக முக்கியம் ➤ரெட்டினால் இருக்கும் சீரமை யூஸ் பண்ணுங்க ➤உடற்பயிற்சியும் செய்யவேண்டும் என டாக்டர்கள் சொல்கின்றனர். SHARE.
News November 22, 2025
செல்போனில் இதை மாற்றினால் 3 ஆண்டு ஜெயில்

TRAI தொலைத்தொடர்புச் சட்டம் 2023-ன் கீழ் செல்போனின் IMEI நம்பர், மோடம், சிம் கார்டு, ரேடியோ ஆகியவற்றில் அடையாளங்களை மாற்றுவது ஜாமினில் வெளிவர முடியாத குற்றமாகும். இதனை மீறுவோருக்கு 3 ஆண்டு ஜெயில் (அ) ₹50 அபராதம் (அ) 2-ம் சேர்த்து விதிக்கப்படும் என தொலைத்தொடர்புத் துறை(DoT) எச்சரித்துள்ளது. இதனால், second Hand-ல் செல்போன் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்கள் வாங்குவோர் ஜாக்கிரதையாக இருங்கள்.


