News April 9, 2024
பாதம் தாங்கி பழனிசாமி என விமர்சித்த உதயநிதி

பாதம் தாங்கி பழனிசாமி என்ற பெயர் தான் எடப்பாடி பழனிசாமிக்கு சரியாக இருக்கும் என உதயநிதி கிண்டலடித்துள்ளார். சேலம் எடப்பாடி பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், தன்னை முதலமைச்சராக மாற்றியவரையே சிறைக்கு அனுப்பிவிட்டு, யார் அந்த சசிகலா என கேள்வி கேட்டவர்தான் இபிஎஸ் என விமர்சித்தார். மேலும், மதுரை எய்ம்ஸ் பற்றி மத்திய அரசிடம் கேள்வி கேட்டால் இபிஎஸ்ஸுக்கு கோபம் வருவது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
Similar News
News April 24, 2025
BREAKING: பாக். நாட்டினருக்கு விசா சேவை நிறுத்தம்

பாக். சேர்ந்தவர்களுக்கு எந்தவித விசாவும் வழங்கப்படமாட்டாது என்ற மத்திய அரசின் அறிவிப்பு அமலுக்கு வந்தது. ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த விசாக்கள் வரும் 27, மருத்துவ விசாக்கள் 29-ம் தேதி முதல் செல்லாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனே வெளியேறவும், தற்போது பாக்.-ல் உள்ள இந்தியர்கள் உடனே நாடு திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News April 24, 2025
இந்தியா ஏவுகணை சோதனை வெற்றி.. அலறும் பாகிஸ்தான்

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய கடற்பரப்பில் ஏவுகணை சோதனையை இந்தியா நடத்தியது. ஐஎன்எஸ் சூரத் (Destroyer) கப்பல் மூலம் கடல்சார் இலக்குகளை துல்லியமாக குறிவைத்து தாக்கும் ஏவுகணை சோதனையை இந்திய கடற்படை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. கொடூர தாக்குதல் மூலம் இந்தியாவை சீண்டுபவர்களுக்கு பதிலடி கொடுக்கும் மெசேஜ். இதனால், எந்த நேரத்திலும் பதில் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
News April 24, 2025
பகுதிநேர ஆசிரியர்களுக்கு விரைவில் ஹேப்பி நியூஸ்

பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நல்ல முடிவை அறிவிப்பார் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்கிற திமுகவின் தேர்தல் வாக்குறுதியை மறுக்கவில்லை. இதுதொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.