News December 6, 2024
உதயநிதி திமிரின் உச்சத்தில் இருக்கிறார்: ஜெயக்குமார்

ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும் இறுமாப்பில் ஸ்டாலினும், உதயநிதியும் திமிரின் உச்சத்தில் செயல்பட்டு வருகிறார்கள் என்று ஜெயக்குமார் காட்டமாக விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “விழுப்புரம், உள்ளிட்ட மாவட்டங்களில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இதனால் அப்பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. இதற்கு திமுக அரசின் நிர்வாக தோல்வியே காரணம்” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Similar News
News November 27, 2025
நாகை: கணவன் அடித்தால் உடனே CALL பண்ணுங்க!

சமீப காலமாக பெண்களுக்கு எதிராக நிகழும் குடும்ப வன்முறைகள் அதிகரித்து கொண்டே வருகின்றன. இத்தகைய சூழலில் நாகை மாவட்ட பெண்கள் எந்த ஒரு வகையான குடும்ப வன்முறையை எதிர்கொண்டாலும், தயங்காமல் மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (8903392839) தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இந்த தகவலை மறக்கமால் SHARE பண்ணுங்க!
News November 27, 2025
சற்றுமுன்: விலை மொத்தம் ₹9,000 உயர்ந்தது

ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்த நிலையில், வெள்ளி விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ₹4 உயர்ந்து ₹180-க்கும், கிலோ வெள்ளி ₹4,000 உயர்ந்து ₹1,80,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, கடந்த மூன்று நாள்களில் மட்டும் வெள்ளி விலை மொத்தம் ₹9,000 அதிகரித்துள்ளது.
News November 27, 2025
ஆஸ்கர் போட்டியில் ‘மகாவதார் நரசிம்மா’

இந்தியாவில் பெரும் வெற்றிபெற்ற அனிமேஷன் படமான ‘மகாவதார் நரசிம்மா’ ஆஸ்கர் போட்டியில் களமிறங்கி, உலகளவில் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. ஆஸ்கரின் அனிமேஷன் பிரிவில் தகுதிபெற்ற 35 படங்களில் ஒன்றாக இது இடம்பெற்றுள்ளது. ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்படும் முதல் அனிமேஷ் படம் என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது. Zootopia 2, Demon Slayer: Infinity Castle உள்ளிட்ட சர்வதேச படங்களுடன் இது போட்டியிடுகிறது.


