News December 6, 2024
உதயநிதி திமிரின் உச்சத்தில் இருக்கிறார்: ஜெயக்குமார்

ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும் இறுமாப்பில் ஸ்டாலினும், உதயநிதியும் திமிரின் உச்சத்தில் செயல்பட்டு வருகிறார்கள் என்று ஜெயக்குமார் காட்டமாக விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “விழுப்புரம், உள்ளிட்ட மாவட்டங்களில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இதனால் அப்பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. இதற்கு திமுக அரசின் நிர்வாக தோல்வியே காரணம்” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Similar News
News April 29, 2025
மே 1 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

மே 1 தொழிலாளர்கள் தினத்தன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் ஹோட்டல்களில் மது விற்பனை இருக்காது. அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் இதுகுறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
News April 29, 2025
அரசியல் பிரமுகரின் மகள் சடலமாக மீட்பு

பஞ்சாப் AAP பிரமுகர் தேவேந்திர் ஷைனியின் மகள் வன்ஷிகா ஷைனி (21), கனடாவின் ஒட்டாவா பீச் அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 2023-ல் கனடா சென்ற அவர், கால் சென்டரில் பணியாற்றி வந்துள்ளார். ஏப்.25-ல் வாடகைக்கு வீடு பார்ப்பதாக கூறிச் சென்றதாக சக தோழிகள் கூறியுள்ளனர். தனது மகளின் சடலத்தை தாயகம் கொண்டுவர மத்திய அரசுக்கு தேவேந்திர் கோரிக்கை விடுத்துள்ளார்.
News April 29, 2025
சுக்கிரன் பெயர்ச்சி: யோகம் அடிக்கும் 3 ராசிகள்

சுக்கிரன் கடந்த ஏப்.26-ம் தேதி, உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சியானார். இதனால் அதிக நன்மைகள் பெறும் 3 ராசிகள்: *மகரம்- தன்னம்பிக்கை அதிகரிக்கும், ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். உறவுகள் வலுப்படும் *கும்பம்: முதலீடுகள் பெருகும். குடும்ப உறவு மேம்படும். அலுவலக அந்தஸ்து உயரும் *மீனம்: திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தொழில், வணிகத்தில் முன்னேற்றம். ஆரோக்கியம் சிறக்கும்.