News December 6, 2024

உதயநிதி திமிரின் உச்சத்தில் இருக்கிறார்: ஜெயக்குமார்

image

ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும் இறுமாப்பில் ஸ்டாலினும், உதயநிதியும் திமிரின் உச்சத்தில் செயல்பட்டு வருகிறார்கள் என்று ஜெயக்குமார் காட்டமாக விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “விழுப்புரம், உள்ளிட்ட மாவட்டங்களில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இதனால் அப்பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. இதற்கு திமுக அரசின் நிர்வாக தோல்வியே காரணம்” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Similar News

News September 11, 2025

கர்ப்பிணிகளுக்கு இலவச பிரசவம்; அசத்தல் திட்டம்

image

மத்திய அரசின் ஜனனி-ஷிஷு சுரக்ஷா திட்டத்தில், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள கர்ப்பிணிகள் மருத்துவமனையில் அட்மிஷன் ஆவது முதல் டெலிவரி வரை அத்தனை செலவையும் அரசே ஏற்கும். அதாவது, கர்ப்பிணிகளுக்கான மருந்து, உணவு, போக்குவரத்து, பரிசோதனைகள் என அத்தனை செலவும் இலவசமாக கிடைக்கும். இத்திட்டத்தில் பயன்பெற, கர்ப்ப காலத்தில் அரசு ஹாஸ்பிடலில் பதிவு செய்து, ஜனனி சுரக்ஷா அட்டையை வாங்கிக்கொள்ளுங்கள். SHARE.

News September 11, 2025

IND Vs PAK போட்டியை ரத்து செய்ய முடியாது: SC

image

செப்.14-ல் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை தொடரின் இந்தியா – பாக்., போட்டியை ரத்து செய்ய கோரி SC-ல் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை, அவசர வழக்காக விசாரிக்க SC மறுத்துள்ளது. அத்துடன், இந்த போட்டியை ரத்து செய்ய முடியாது என்றும் SC தெரிவித்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இப்போட்டியை கொண்டாடுவது, ராணுவ வீரர்கள், உயிரிழந்தவர்களது குடும்பங்களின் தியாகத்தை அவமதிப்பது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

News September 11, 2025

செங்கோட்டையன் வரிசையில் இணைந்தார்.. அதிரடி நீக்கம்

image

ஒரே வாரத்தில் 3 முக்கிய தலைவர்களின் அடுத்தடுத்த நீக்கம் TN அரசியல் களத்தில் புயலை கிளப்பியுள்ளது. கடந்த 6-ம் தேதி செங்கோட்டையனை அதிமுகவின் பொறுப்புகளில் இருந்து EPS நீக்கினார். 8-ம் தேதி மதிமுகவில் இருந்து மல்லை சத்யாவை நிரந்தரமாக நீக்கி வைகோ அதிரடியாக அறிவித்தார். அந்த வரிசையில் தற்போது பாமகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து அன்புமணியை, ராமதாஸ் நீக்கியுள்ளார்.

error: Content is protected !!