News April 7, 2024
ஜன்னல் வழியாக இழுத்து தூக்கி வீசப்பட்ட இருவர் பலி

சீனாவின் தெற்கே ஜியாங்சி மாகாணத்தில் கடந்த ஒரு வாரமாக கடுமையான புயல் வீசி வருகிறது. இதுவரையில் 7 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், நான்சங்க் நகரில் 60 வயது மூதாட்டி மற்றும் அவரது 11 வயது பேரன் குடியிருப்பில் இருந்தபோதே படுக்கை விரிப்போடு சேர்த்து ஜன்னல் வழியாக இழுத்து தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Similar News
News March 12, 2026
புதுச்சேரி: பாதுகாப்பு குறைபாடு – நடவடிக்கை எடுக்க பரிந்துரை

புதுச்சேரி ஆளுநர் தற்காலிகமாக தங்கியிருக்கும் மாளிகைக்குள், கடந்த 9ஆம் தேதி நள்ளிரவு ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் மதுபோதையில் அத்துமீறி நுழைந்துள்ளார். இது சம்பந்தமாக பாதுகாப்பு பணியில் கவனக்குறைவாக இருந்த ஆயுதப்படை காவலரை பணிநீக்கம் செய்யவும், அவருடன் பணியில் இருந்த 4 காவலர்களை பணியிடை நீக்கம் செய்யவும் டி.ஜி.பி ஷாலினி சிங்குக்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் பரிந்துரைத்துள்ளார்.
News March 12, 2026
அதிக உயிரிழப்புகள்.. இந்த விலங்குதான் டாப்பு!

சராசரியாக உலகளவில் ஆண்டுதோறும், மனித இறப்புகளுக்கு காரணமாக இருக்கும் விலங்குகளின் பட்டியலை WHO மற்று BBC Science Focus இணைந்து வெளியிட்டுள்ளன. இந்த அதிர்ச்சியூட்டும் பட்டியலில், நாம் நினைத்து பார்க்காத விலங்குகள் இடம்பிடித்துள்ளன. எந்த உயிரினத்தால், எவ்வளவு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்பதை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News March 12, 2026
பணிப்பெண்ணிடம் தவறாக நடக்கவில்லை: பாக். வீரர்

இலங்கையில் <<19302700>>ஹோட்டல் பணிப்பெண்ணிடம்<<>> தவறாக நடந்து கொண்டதாக வெளியான தகவலை பாகிஸ்தான் வீரர் சல்மான் மிர்சா மறுத்துள்ளார். மேலும், தவறான செய்திகளை வெளியிட்ட ஊடகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், தவறாக செய்தி வெளியிட்ட பாக். ஊடகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். T20 உலகக் கோப்பை தொடரின் போது நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


